பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை தடுக்கும்  உரிமையை அதிகார வ(ர்)க்கத்தவர்களுக்கு கொடுத்தது யார்?

Published:

தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால்  பெரும்பாலோனர் பலியாகியும், லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து, உண்ண உணவின்றித் தவித்து வருகிறார்கள்.பச்சிளங்குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நிலையே தற்போது நிலவுகிறது.

வெள்ளத்தால்  பாதிப்படைந்தவர்களுக்கு தமிழக அரசாங்கமும் அரசியல் கட்சியினரும் உடனடியாக எவ்விதமான உதவிகளும்  செய்ய  முன்வரவில்லை எனும் குற்றசாட்டே தமிழக மக்களால் கூறப்படுகிறது.

மேலும் ஜாதி, மத, வேறுபாடுகள் இன்றி பொதுநல நோக்கத்தில் அதிகபட்ச உடனடியாக வெள்ளத்தால்  பாதிப்படைந்தவர்களுக்கு உதவி செய்ய  தமிழக பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் முன்வந்துள்ளன.

பொதுமக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்கள் மீதும்  ஜெயலலிதா புகைப்படத்தை ஓட்டி இலவச சுய விளம்பரம் தேடிக்கொள்வதற்கு என்ன உரிமையுள்ளது?  எனும் கேள்வியுடன் புகைப்பட பிரச்சனை விஸ்வரூபம்  எடுத்துள்ளது.மேலும் அரசியல் கட்சியினர் ஓட்டு கேட்டு வந்தால் செருப்பாலும், துடைப்பத்தாலும் அடிப்போம் எனும்  மக்கள்  குமுறலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அண்டை நாடான அமெரிக்கா வெள்ள பாதிப்பிற்குள்ளான தமிழக மக்களுக்கு தானாக முன்வந்து உதவத் தயாராக  இருப்பதாக  அறிவித்துள்ளது. மேலும் இந்திய அரசாங்கம் அமெரிக்காவிடம் எவ்விதமான உதவியைக் கேட்டும் கோரிக்கை  விடுக்கவில்லை என்றும் மிக வருத்தத்துடன் கூறியுள்ளது. 

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

மேலும் இலங்கை  வடமாகாண முதலமைச்சர் இலங்கையிலுள்ள இந்திய துணை தூதரகத்தில் வெள்ள பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் தமிழக உறவுகளுக்கு உதவிப் பொருட்களை ஒப்படைத்தால் அதனை தமிழகத்திற்கு கொண்டு சென்று சேர்ப்பிக்க இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம்  கோரிக்கை  விடுத்தாராம்.அதற்கு இலங்கையிலுள்ள இந்திய  துணை தூதரக அதிகாரிகள் தமிழக உறவுகளுக்கு எந்தவொரு உதவியும் தேவையில்லையென முகத்திலடித்தது போல பதிலளித்து, எதனையும் பொறுப்பேற்கவோ அவற்றினை தமிழ் நாட்டிற்கு எடுத்து சென்று சேர்ப்பிக்கவோ தமதுஅலுவலகம் தயாராக இல்லையென தெரிவித்துள்ளதாக வாட்ஸ் ஆப்பில்   தகவல் வைரலாக  பரவி வருகிறது.

 தமிழகத்திலேயே  பலர்  தானாக  கொடுக்கும்  வெள்ள  நிவாரண  உதவியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கமறுத்துவருவதாக பலரால்  கூறப்படுகிறது.பொதுமக்கள் ஆட்சி அமைக்க கொடுத்த  அதிகாரத்தால் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து இருக்கிறோம் என்பதை அதிகார வ(ர்)க்கத்தவர்கள் மறந்து விடக் கூடாது .

பாதிப்படைந்த பொது மக்களுக்கு தானாக முன்வந்து உதவி செய்ய முன்வருபவர்களை  அதிகார வ(ர்)க்கத்தவர்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு  உட்பட்டு அவர்கள்  செய்யும் உதவியை  தடுக்கும்  அதிகாரம் எவருக்கும் இல்லை. உதவுவதை தடுக்கும்  உரிமையை அதிகார வ(ர்)க்கத்தவர்களுக்கு கொடுத்தது யார்? என்றும் கேள்வி  எழுப்புகின்றனர். 

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

மேலும்  கௌரவம்தான் எனக்கு மிக முக்கியம் என வரட்டு ஜம்பத்தில் இருக்கும் அதிகார வ(ர்)க்கத்தவர்கள் தானாகவே  பதவியை  ராஜினாமா செய்து விட்டு  முட்டையை கட்டிக்கொண்டு    பொது  வாழ்க்கையில் இருந்து  ஓடி விடுவதே சாலச் சிறந்தது என தமிழக மக்கள் பெரும்பாலானோர்  கூறுகின்றனர்.

 

 

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img