பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை தடுக்கும்  உரிமையை அதிகார வ(ர்)க்கத்தவர்களுக்கு கொடுத்தது யார்?

தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால்  பெரும்பாலோனர் பலியாகியும், லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து, உண்ண உணவின்றித் தவித்து வருகிறார்கள்.பச்சிளங்குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நிலையே தற்போது நிலவுகிறது.

வெள்ளத்தால்  பாதிப்படைந்தவர்களுக்கு தமிழக அரசாங்கமும் அரசியல் கட்சியினரும் உடனடியாக எவ்விதமான உதவிகளும்  செய்ய  முன்வரவில்லை எனும் குற்றசாட்டே தமிழக மக்களால் கூறப்படுகிறது.

மேலும் ஜாதி, மத, வேறுபாடுகள் இன்றி பொதுநல நோக்கத்தில் அதிகபட்ச உடனடியாக வெள்ளத்தால்  பாதிப்படைந்தவர்களுக்கு உதவி செய்ய  தமிழக பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் முன்வந்துள்ளன.

பொதுமக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்கள் மீதும்  ஜெயலலிதா புகைப்படத்தை ஓட்டி இலவச சுய விளம்பரம் தேடிக்கொள்வதற்கு என்ன உரிமையுள்ளது?  எனும் கேள்வியுடன் புகைப்பட பிரச்சனை விஸ்வரூபம்  எடுத்துள்ளது.மேலும் அரசியல் கட்சியினர் ஓட்டு கேட்டு வந்தால் செருப்பாலும், துடைப்பத்தாலும் அடிப்போம் எனும்  மக்கள்  குமுறலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அண்டை நாடான அமெரிக்கா வெள்ள பாதிப்பிற்குள்ளான தமிழக மக்களுக்கு தானாக முன்வந்து உதவத் தயாராக  இருப்பதாக  அறிவித்துள்ளது. மேலும் இந்திய அரசாங்கம் அமெரிக்காவிடம் எவ்விதமான உதவியைக் கேட்டும் கோரிக்கை  விடுக்கவில்லை என்றும் மிக வருத்தத்துடன் கூறியுள்ளது. 

மேலும் இலங்கை  வடமாகாண முதலமைச்சர் இலங்கையிலுள்ள இந்திய துணை தூதரகத்தில் வெள்ள பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் தமிழக உறவுகளுக்கு உதவிப் பொருட்களை ஒப்படைத்தால் அதனை தமிழகத்திற்கு கொண்டு சென்று சேர்ப்பிக்க இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம்  கோரிக்கை  விடுத்தாராம்.அதற்கு இலங்கையிலுள்ள இந்திய  துணை தூதரக அதிகாரிகள் தமிழக உறவுகளுக்கு எந்தவொரு உதவியும் தேவையில்லையென முகத்திலடித்தது போல பதிலளித்து, எதனையும் பொறுப்பேற்கவோ அவற்றினை தமிழ் நாட்டிற்கு எடுத்து சென்று சேர்ப்பிக்கவோ தமதுஅலுவலகம் தயாராக இல்லையென தெரிவித்துள்ளதாக வாட்ஸ் ஆப்பில்   தகவல் வைரலாக  பரவி வருகிறது.

 தமிழகத்திலேயே  பலர்  தானாக  கொடுக்கும்  வெள்ள  நிவாரண  உதவியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கமறுத்துவருவதாக பலரால்  கூறப்படுகிறது.பொதுமக்கள் ஆட்சி அமைக்க கொடுத்த  அதிகாரத்தால் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து இருக்கிறோம் என்பதை அதிகார வ(ர்)க்கத்தவர்கள் மறந்து விடக் கூடாது .

பாதிப்படைந்த பொது மக்களுக்கு தானாக முன்வந்து உதவி செய்ய முன்வருபவர்களை  அதிகார வ(ர்)க்கத்தவர்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு  உட்பட்டு அவர்கள்  செய்யும் உதவியை  தடுக்கும்  அதிகாரம் எவருக்கும் இல்லை. உதவுவதை தடுக்கும்  உரிமையை அதிகார வ(ர்)க்கத்தவர்களுக்கு கொடுத்தது யார்? என்றும் கேள்வி  எழுப்புகின்றனர். 

மேலும்  கௌரவம்தான் எனக்கு மிக முக்கியம் என வரட்டு ஜம்பத்தில் இருக்கும் அதிகார வ(ர்)க்கத்தவர்கள் தானாகவே  பதவியை  ராஜினாமா செய்து விட்டு  முட்டையை கட்டிக்கொண்டு    பொது  வாழ்க்கையில் இருந்து  ஓடி விடுவதே சாலச் சிறந்தது என தமிழக மக்கள் பெரும்பாலானோர்  கூறுகின்றனர்.

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories