தமிழகத்தில் தற்போது ஏற்பட்டிருப்பது அரசியல் தலைவர்களின் துர்நாற்றம்

Published:

 
 
அரசியல் என்பது ஒரு சேவை என்பதை மறந்து அதை பணம் சம்பாதிக்கும் ஆயுதமாக பயன்படுத்தியதின் விளைவாக ஏற்பட்ட துயரநிகழ்வுதான் இது!!
 
நம் நாடு, நம் மக்கள், நம் இனம்-இன்று உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, இருக்க இடமின்றி தவிப்பதை அறிவோம்!!
 
இன்று நாமும் அங்கு இருந்திருந்தால் நம் நிலமை என்ன? நம் ஏக்கம் என்ன ?
நமக்கும் யாரேனும் உதவிட மாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பு கண்களில் குருதி புரண்டோடச் செய்திருக்கும் என்பதை உணர்கிறேன்!!
 
நாம் உழைத்து பெறும் பணத்தின் மதிப்பு என்னவென்று தெரிந்துகொள்ள முயற்சிப்போம்!!
நம் மக்களின் கரம் பிடித்து கரைசேர்க்க முன்வருவோம்!!
 
நாம் வீணென்று நினைத்து தூக்கி எறியும் பழைய செய்தித்தாள்கூட அவர்களுக்கு படுக்கையாய் பயன்படும் என்பதை இன்று நாம் அறிவோம்!!
 
நம்மால் முடிந்ததை பணமாகவோ, பண்டமாகவோ நாம் அறிந்தவர்கள் மூலமாக கொண்டுசேர்க்க முயற்சிப்போம்!! நம் உறவுகளின் உயிர் காப்போம்!!
 
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டிருப்பது இயற்கைச் சீற்றம் அல்ல!!
நம் அரசியல் தலைவர்களின் துர்நாற்றம்!!
 
என்பதை மக்களுக்கு புரியவைத்து அரசியலில் விழிப்புணர்வை அனைவரும் ஏற்படுத்துவோம்!!
 
வருங்காலங்களில் இலவசத்திற்கும் பணத்திற்கும் பலியாகாமல் இருக்க இந்த நிகழ்வு நமக்கெல்லாம் ஓர் நல்ல பாடமாக அமையுமென நம்புகிறேன்!!
 
நல்ல பாரதம் அமைத்திட, உயர்த்திட இன்றைய சூழலில் படிப்பு எவ்வாறு இன்றியமையாததோ, அதுபோல அரசியல் விழிப்புணர்வும் அவசியமானது!!
 
நமது உரிமைகளை நாம் கேட்டால் மட்டுமே பெறமுடியும் என்பதையும் அறிந்துகொள்வோம்!!
 
அரசியல் நமது உரிமை!! அது சாக்கடையல்ல!!
உதவிடு!! உயர்த்திடு!!
 
– வசந்த் குமார் –
தினசரி இணைய தமிழ்ச் செய்தித் தள வாசகர்
ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img