பாவூர்சத்திரம் அருகே கொடிகம்பங்கள் அகற்றம் பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் நாட்டார்பட்டி தற்போது பெய்து வரும் கனமழையால் ஊர் அருகே உள்ள குளங்கள் பெருகி அதன் உபரி நீர் மற்றும் வயல்களில் ஊற்று தண்ணீர் ஊர் பகுதியில் உள்ள வாறுகால் வழியாக வரத் தொடங்கியது . இந்நிலையில் நாட்டார்பட்டி பூவனூர் சாலையில் உள்ள வாறுகாலில் நேற்று தண்ணீர் அதிகரிக்க ,அதிகரிக்க கழிவுகள் போய் அடைத்துக்கொண்டு நீர் செல்ல முடியாமல் ஊருக்குள் வரத்தொடங்கியது ,சென்னை நிலை இங்கும் ஏற்றப்பட்டு விடக்கூடாது என்று அப்பகுதி கிராமமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தண்ணீர் ஊருக்குள் வந்து விடாமல் இருக்க அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற முன்வந்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு பகுதிகளை அதன் உரிமையாளர்களே முன்வந்து எடுத்து கொள்வதாக முடிவுஎடுத்து திப்பணம்பட்டி பஞ்சாயத்திற்கு எழுத்து பூர்வமாக தெரிவித்தனர். பின்னர் ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளின் முன்பகுதி மற்றும் தெருவோரக் கடைகள் மற்றும் ஆக்கிரமித்து கொட்டப்பட்ட கழிவுகள் மற்றும் ரேசன்கடை அருகில் இருந்த அனைத்து கொடிகம்பங்களை அந்தந்த கட்சியினரே முன்வந்து அகற்றினர். பின்னர் கொடிகம்பம் அமைக்கபட்டிருந்த கான்கிரீட் மேடைகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது மேலும் வாறுகாலில் ஆங்காங்கே இருந்த அடைப்புகளையும் சரிசெய்தனர். இதனால் நாட்டார்பட்டி, பூவனூர் சாலை சிலமணிநேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.கடலூர் மற்றும் சென்னை மழை நல்ல பாடம் கற்றுத்தந்தது ,மக்களும் பாடம் கற்றுக்கொண்டனர் ,இனியாவது அனைத்துஊர்களிலும் இது போன்ற ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்து நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை அரசு அகற்ற முன்வரவேண்டும் மக்களும் அரசையே எதிர்பார்க்காமல் ஆக்கிரமிப்பு என தெரிந்தால் இயற்கையை எதிர்க்காமல் உரியவர்களே முன்வந்து அகற்றினால் பேரழிவுகளை தவிர்க்கலாம்
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!
திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
உரத்த சிந்தனை
தகுந்த வைத்தியம் தேவை!
ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...
மதுரை
திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!
திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!
திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
உரத்த சிந்தனை
தகுந்த வைத்தியம் தேவை!
ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...
மதுரை
திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!
திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
உரத்த சிந்தனை
துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!
துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது. அவர்களுக்கு பாராட்டுகள்.
கல்வி
1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!
சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.
Entertainment News
Previous article

