பாவூர்சத்திரம் அருகே ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கொடிக்கம்பங்கள் அகறம்

பாவூர்சத்திரம் அருகே கொடிகம்பங்கள் அகற்றம்  பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் நாட்டார்பட்டி   தற்போது பெய்து வரும் கனமழையால்   ஊர் அருகே உள்ள குளங்கள் பெருகி அதன் உபரி நீர்  மற்றும்  வயல்களில் ஊற்று தண்ணீர்  ஊர் பகுதியில் உள்ள வாறுகால் வழியாக வரத் தொடங்கியது . இந்நிலையில் நாட்டார்பட்டி பூவனூர் சாலையில் உள்ள வாறுகாலில் நேற்று தண்ணீர் அதிகரிக்க ,அதிகரிக்க கழிவுகள் போய் அடைத்துக்கொண்டு நீர் செல்ல முடியாமல் ஊருக்குள் வரத்தொடங்கியது ,சென்னை நிலை  இங்கும் ஏற்றப்பட்டு விடக்கூடாது என்று அப்பகுதி கிராமமக்கள்   அனைவரும் ஒன்று சேர்ந்து, தண்ணீர் ஊருக்குள் வந்து விடாமல் இருக்க அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற முன்வந்தனர்.   இதையடுத்து  ஆக்கிரமிப்பு பகுதிகளை அதன் உரிமையாளர்களே முன்வந்து எடுத்து கொள்வதாக முடிவுஎடுத்து திப்பணம்பட்டி பஞ்சாயத்திற்கு எழுத்து பூர்வமாக தெரிவித்தனர். பின்னர் ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளின் முன்பகுதி மற்றும் தெருவோரக் கடைகள்  மற்றும் ஆக்கிரமித்து கொட்டப்பட்ட கழிவுகள் மற்றும் ரேசன்கடை அருகில் இருந்த அனைத்து கொடிகம்பங்களை அந்தந்த கட்சியினரே முன்வந்து அகற்றினர். பின்னர் கொடிகம்பம் அமைக்கபட்டிருந்த கான்கிரீட் மேடைகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது மேலும் வாறுகாலில் ஆங்காங்கே இருந்த அடைப்புகளையும் சரிசெய்தனர். இதனால் நாட்டார்பட்டி, பூவனூர் சாலை சிலமணிநேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.கடலூர் மற்றும் சென்னை மழை நல்ல பாடம் கற்றுத்தந்தது ,மக்களும் பாடம் கற்றுக்கொண்டனர் ,இனியாவது அனைத்துஊர்களிலும் இது போன்ற ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்து நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை அரசு அகற்ற முன்வரவேண்டும் மக்களும் அரசையே எதிர்பார்க்காமல் ஆக்கிரமிப்பு என தெரிந்தால் இயற்கையை எதிர்க்காமல் உரியவர்களே முன்வந்து அகற்றினால் பேரழிவுகளை தவிர்க்கலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Entertainment News

Popular Categories