பாவூர்சத்திரம் அருகே கொடிகம்பங்கள் அகற்றம் பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் நாட்டார்பட்டி தற்போது பெய்து வரும் கனமழையால் ஊர் அருகே உள்ள குளங்கள் பெருகி அதன் உபரி நீர் மற்றும் வயல்களில் ஊற்று தண்ணீர் ஊர் பகுதியில் உள்ள வாறுகால் வழியாக வரத் தொடங்கியது . இந்நிலையில் நாட்டார்பட்டி பூவனூர் சாலையில் உள்ள வாறுகாலில் நேற்று தண்ணீர் அதிகரிக்க ,அதிகரிக்க கழிவுகள் போய் அடைத்துக்கொண்டு நீர் செல்ல முடியாமல் ஊருக்குள் வரத்தொடங்கியது ,சென்னை நிலை இங்கும் ஏற்றப்பட்டு விடக்கூடாது என்று அப்பகுதி கிராமமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தண்ணீர் ஊருக்குள் வந்து விடாமல் இருக்க அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற முன்வந்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு பகுதிகளை அதன் உரிமையாளர்களே முன்வந்து எடுத்து கொள்வதாக முடிவுஎடுத்து திப்பணம்பட்டி பஞ்சாயத்திற்கு எழுத்து பூர்வமாக தெரிவித்தனர். பின்னர் ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளின் முன்பகுதி மற்றும் தெருவோரக் கடைகள் மற்றும் ஆக்கிரமித்து கொட்டப்பட்ட கழிவுகள் மற்றும் ரேசன்கடை அருகில் இருந்த அனைத்து கொடிகம்பங்களை அந்தந்த கட்சியினரே முன்வந்து அகற்றினர். பின்னர் கொடிகம்பம் அமைக்கபட்டிருந்த கான்கிரீட் மேடைகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது மேலும் வாறுகாலில் ஆங்காங்கே இருந்த அடைப்புகளையும் சரிசெய்தனர். இதனால் நாட்டார்பட்டி, பூவனூர் சாலை சிலமணிநேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.கடலூர் மற்றும் சென்னை மழை நல்ல பாடம் கற்றுத்தந்தது ,மக்களும் பாடம் கற்றுக்கொண்டனர் ,இனியாவது அனைத்துஊர்களிலும் இது போன்ற ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்து நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை அரசு அகற்ற முன்வரவேண்டும் மக்களும் அரசையே எதிர்பார்க்காமல் ஆக்கிரமிப்பு என தெரிந்தால் இயற்கையை எதிர்க்காமல் உரியவர்களே முன்வந்து அகற்றினால் பேரழிவுகளை தவிர்க்கலாம்
பாவூர்சத்திரம் அருகே ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கொடிக்கம்பங்கள் அகறம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

