தமிழக அரசாங்கத்தை ஆள நேர்மையான அரசு அதிகாரிகளை ஆட்சி கட்டிலில் அமரவைக்க மாணவர்கள் திட்டம்

Published:

அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகள்மீது வெறுப்படைந்த தமிழக மாணவர்கள் நேர்மையான அரசாங்க ( அரசு பணி ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள) அதிகாரிகளை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க மாணவர்கள் திட்டம் போட்டு முகநூலில் “Need A Change – 2016” எனும் சமூக பக்கத்தை நேற்று
உருவாக்கியுள்ளனர்.

மக்களின் வரிப் பணத்தில் தமிழக அரசாங்கம் பொதுமக்களுக்கான அனைத்து நலத்திட்ட உதவிகளுக்காக செலவிட பெரும் தொகையை ஒதுக்குகிறது.

அவ்வாறு ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய்களை பெரும்பாலான அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகள் பொதுநல நோக்கம் இன்றி லஞ்சம் பெற்றும், ஊழல் செய்தும், பொதுநலத் திட்டங்களுக்கு முறையாக செலவிடாமல் கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் பேராசையில் தொடர்ந்து சுற்றி திரிந்து வரும் சுயநல அரசியல்வாதி கரைவேட்டி கொள்ளையர்கள் அரசியலை குலத் தொழிலாக செய்து வருகின்றனர்.

சாதாரணமாக சாப்பிடவே வழியின்றி பெரும்பாலானவர்கள் அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகளின் ஆதரவால் அவர்களுக்காக பல சமூக விரோத செயல்களை செய்து பரவலாக தமிழகத்தில் தொடர்ந்து சுற்றி திரிந்து வருவதாக தமிழக மக்களால் பரவலாக பேசப்படுகிறது.

சாப்பிடவே வழியின்றி சுற்றி திரிந்த பலர் அரசியல் கட்சியில் இணைந்து அந்த கட்சியில் வட்டம், சதுரம், முக்கோணம் என பதவிகளைப் பெற்று கட்டப் பஞ்சாயத்து செய்தும், பொதுமக்களின் வரிப் பணத்தை கொள்ளையடித்தும் அரசியலை குலத் தொழிலாக மாற்றி சொத்து சேர்த்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழையால் ஏற்பட்ட பெருத்த வெள்ளத்தால் 269 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் பெருத்த சேதத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து, உண்ண உணவின்றித் தவித்து வருகிறார்கள். பச்சிளங்குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நிலையே தற்போது நிலவுகிறது.

இந்த நிலை ஏற்பட்டதற்கு முக்கியக் காரணமே பொதுநல நோக்கம் இன்றி லஞ்சம் பெற்றும் ஊழல் செய்தும், பொதுமக்களின் வரிப் பணத்தை அரசாங்க பொதுநல திட்டங்களுக்கு முறையாக செலவிடாமல் கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் பேராசையில் தொடர்ந்து சுற்றி திரிந் து வரும் சுயநல அரசியல்வாதி கரைவேட்டி கொள்ளையர்களே என பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகிறது.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

அரசியல்வாதிகள் பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பணத்தை கொள்ளை அடித்து சொத்து சேர்க்க செய்த அட்டகாசத்தில் ஒன்றுதான் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு. தண்ணீர் செல்லும் பாதைகளையெல்லாம் அடைத்தும், குளங்கள், கண்மாய்களையெல்லாம் அழித்தும் பெரும் பணம் கொண்ட கூட்டத்திடம் வசூல் வேட்டை நடத்தி அந்த இடத்தை குடியிருப்பு பகுதிகளாக ஆக்க அரசாங்கத்தை ஆண்ட அதிகார வர்க்கத்தினர் அனுமதி அளித்தது முதல் தவறு. இதை விட பெரிய கொடுமை அரசாங்கமே கண்மாய்களையெல்லாம் குடியிருப்பு பகுதிகளாக ஆக்கி பொதுமக்களிடம் விற்றது.

தண்ணீர் செல்லும் பாதைகளையெல்லாம் ஆக்கிரமிக்காமல் இருந்திருந்தால் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கடும் மழையால் ஏற்பட்ட பெருத்த வெள்ள விபத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்ததையும் 269 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் உயிர் பலி யையும் தவிர்த்து இருக்க முடியும்.

மேலும் தண்ணீர் செல் லும், தேங்கும் இடங்களையெல்லாம் ஆக்கிரமித்துவிட்டு இன்று குய்யோ முறையோ என்று இயற்கையின்மீது குறைசொல்வது என்ன நியாயம்? மேலும் மிகவும் திறமை வாய்ந்த பெரும்பாலான எழுத்தாளர்கள் மற்றும் பல ஊடக நிர்வாக ங்களும் பொதுநல நோக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல் கொள்ளையடிக்க சுற்றி திரியும் அரசியல்வாதி களுக்கு ஆதரவாக அவர்களிடம் வாங்க வேண்டியதை வாங்கி கொண்டு கரைவேட்டி கொள்ளையர்களின் புகழை ஊடகங்களின் வாயிலாக பரப்பி வருவதாகவும் பலரால் கூறப்படுகிறது.

மேலும் தற்போது மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த அனைத்து இடங்களிலும் அதிகபட்ச உடனடியாக உதவி செய்தது யார் என்றால் ஜாதி, மத, வேறுபாடுகள் இன்றி பொதுநல நோக்கத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள் வெளி மாவட்டங்களில் இருந்தும் உணவு மற்றும் தேவையான அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து கொண்டு சென்று இலவசமாக வழங்கி சேவை வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தமிழக அரசாங்கமும் அரசியல் கட்சியினரும் எந்த உதவியும் செய்யவில்லை என்பதுதான் பொதுமக்களின் குற்றச் சாட்டு. தற்போதுள்ள ஆளும் கட்சியை சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பெயர் அளவில் பொதுமக்களுக்கு உதவி செய்வதாக கூறி ஊடகங்கள் வாயிலாக தலையை காட்டிவிட்டு அவர்களும் தலைமறைவு ஆகிவிட்டனர்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

தமிழக அரசை நம்பாமல் தங்களால் முடிந்த உதவிகளை தாங்களாக முன்வந்து வீடிழந்து, பசி, பட்டினியால், நிம்மதியிழந்து திக்கற்று தவிக்கும் தொப்புள்கொடி உறவுகளின் துயர் துடைக்க கொடுக்கும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கிய நிவாரணப் பொருட்கள்மீதுகூட முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஒட்டி அயோக்கியத்தனம் செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசியல் போன்று எவ்விதமான இலவச சுய விளம்பரமும் தேடிக் கொள்ள ஆசைப்படாமல் பாதிக்கப்பட்டோருக்கு உதவியது இன, மத, மொழி, நிற வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு மனித நேயத்துடன் உதவிக்கரம் கொடுத்த தனியார் அமைப்புகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் மனிதநேயம் கொண்ட தனி மனிதர்களும்தான் என்றால் மிகையல்ல.

தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டு இருக்கும் அதிமுக கட்சியின் சார்பில் சொந்த செலவில் வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு என்ன நிவாரண உதவி செய்தார்கள் எனும் கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மாநகரின் ஒரு பகுதியில் வெளி மாநிலத்தை சேர்ந்த தன்னார்வ தொண்டு அமைப்பினர் மனித நேயத்துடன் வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு பொதுமக்கள் இருக்கும் பகுதியிலேயே 5000 உணவுப் பொட்டலங்களை தயார் செய்தனர். அப்போது அதிமுக கட்சியை சேர்ந்த அந்த பகுதி கவுன்சிலரின் கணவர் பார்த்திபன் என்பவர் அதிமுக கட்சியின் சார்பில் வழங்க 2000 உணவு பொட்டலங்களை தன்னார்வ தொண்டு அமைப்பினரிடம் கேட்டு மிரட்டி அட்டூழியம் செய்ததாகவும் செய்திகள் வந்துள்ளன.
வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக தமிழக அரசாங்கமும் அரசியல் கட்சியினரும் எந்த நிவாரண உதவியும் செய்யவில்லை என்பதை உணர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் வரும் 2016ம் வருடம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தற்போதுள்ள அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகளுக்கு எதிராக வாக்களித்து ஒழித்து கட்ட வேண்டும் என தமிழக மக்கள் கங்கணம் கட்டிக் கொண்டு மனக் குமுறலுடன் உள்ளனர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இந்த நிலையில் அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகள்மீது வெறுப்படைந்த தமிழக மாணவர்கள் நேர்மையான அரசாங்க ( அரசு பணி ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள) அதிகாரிகளை ஆட்சி கட்டிலில் அமர வைக்க திட்டம் போட்டு முகநூலில் Need A Change – 2016 எனும் சமூகப் பக்கத்தை நேற்று உருவாக்கியுள்ளனர்.

மாணவர்கள் உருவாக்கிய அந்த முகநூல் சமூகப் பக்கத்தை இதுவரை 4000திற்கும் மேற்பட்டோர் விரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகள் ஒழிந்து நேர்மையான அரசாங்க (அரசு பணி ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள) அதிகாரிகளை ஆட்சி கட்டிலில் அமரவைத்து நல்லாட்சி மலர மாணவர்கள் போடும் திட்டம் சரியானதே.

இளம் தலைமுறையினரின் பிற்கால வாழ்க்கை நலனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் நல்லாட்சி மலர நேர்மையான அரசாங்க (அரசு பணி ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள) அதிகாரிகளை ஆட்சி கட்டிலில் அமர வைக்க முன்வர வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

தமிழகத்தில் நல்லாட்சி மலர நடைபெறவுள்ள 2016ம் வருட சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நேர்மையான அரசாங்க (அரசு பணி ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள) அதிகாரிகளுக்கு ஆதரவாக அனைவரும் வாக்களித்து கட்டாயம் வெற்றி பெற செய்வார்கள் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

எது எப்படியோ பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பொதுமக்களின் வரிப் பணத்தை ஊழல் செய்து கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகள் ஒழிந்தால் சரி .

தமிழகத்தில் நல்லாட்சி மலர மாணவர்கள் எடுத்துள்ள முயற்சி வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img