December 7, 2025, 12:22 AM
25.6 C
Chennai

ஊடகங்களுக்கு சவால் விடுக்கும் தேமுதிகவினர்

தமிழக அரசாங்கத்தின் செய்திகளை ஊடகங்கள் வெளியிடும்போது முதலமைச்சரின் புகைப்படத்திற்கு பதிலாக தமிழக அரசு முத்திரையையும் அதே போல் அரசியல் கட்சியைப் பற்றிய செய்திகளை வெளியிடும்போது அரசியல் கட்சியின் தலைவர் புகைப்படத்திற்கு பதிலாக அரசியல் கட்சியின் கொடியையும் வெளியிடும் தைரியம் உள்ளதா? என அனைத்து ஊடக நிறுவனங்களிடம் தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி என்பவர் அவரது முகநூல் பக்கத்தின் பதிவின் வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் மாலிக் அன்சாரியின் முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளதாவது :-

விளம்பரத்தை நம்பி பிழைப்பு நடத்தும் ஊடகங்களுக்கு சவால்…

தமிழக மக்களின் வரிப் பணத்தில், பல மனிதநேய உள்ளம் படைத்தவர்கள் தரும் முதலமைச்சர் நிவாரண நிதி பணத்தில் தமிழக அரசின் சின்னத்தை புறந்தள்ளி தன்னுடைய படத்தையே முன்னிறுத்துகிறார் ஜெயலலிதா…

ஏன் மேதகு அப்துல் கலாம் அவர்கள் பெயரில் கொடுக்கப்பட்ட விருதில் கூட ஜெயலலிதா படம்தான் பிரதானமாக பொறிக்கப்பட்டது. இதை எல்லாம் ஜெயலலிதா தவிர்க்கமாட்டார்தான்…

அரசு விளம்பரம் மற்றும் கட்சி விளம்பரம் என வருவாயை நம்பி நக்கி பிழைப்பு நடத்தும் விபச்சார ஊடகமே…

தமிழக அரசு சார்பாக கொடுக்கப்படும் நிவாரணத் திட்டங்களில் சலுகைககளில் விலையில்லா பொருள்களில் உள்ள ஜெயலலிதா படம் தெரியாதவாறு தமிழ்நாடு அரசு முத்திரையை முன்னிறுத்தி வெளியிட திராணி இருக்கிறதா ஊடகங்களுக்கு?

ஊடகங்களே! இதுதான் சரியான தருணம். உண்மையிலே அக்கரை இருந்தால் ஊடகங்கள் இதை செய்ய வேண்டும்…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் மட்டும் இதை எல்லாம் பின்பற்றுகிறார், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும்போது கொடி தோரணமோ, அவரின் புகைப்படமோ, வாழ்க கோஷமோ எதையுமே அவர் ரசிப்பதும் இல்லை, அனுமதிப்பதும் இல்லை…

நீங்கள் சொல்லலாம், தூத்துக்குடியில் கொடுத்த நிவாரணப் பையில் கேப்டன் படம் இருந்ததே என்று, அந்த நிகழ்ச்சி பெரும் மழை சென்னையை மூழ்கடிக்கும் முன்பே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி, பெரும் வெள்ளத்தால் விமான நிலையம் மூடப்பட்டதால் நிறுத்தி வைத்திருந்தார், விமான நிலையம் செயல்பட தொடங்கிய உடனே சென்று நிவாரணத்தை அளித்தார்.

ஆனால் இன்று விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் நிவாரணம் வழங்கும்போது முற்றிலுமாக அவரின் புகைப்படத்தை தவிர்த்தார்…

உண்மையிலேயே நான்காவது தூண் ஊடகங்கள் என்றால், மற்றவர்களை விமர்சிக்கும் ஊடகமே, அரசியல் கட்சிகள், தமிழக அரசு தரும் நிவாரண பொருள்களில் உள்ள முதல்வர் புகைப்படத்தை தவிர்த்து அரசு முத்திரையை முன்னிருத்தி செய்திகளை வெளியிட தைரியம் இருக்கா உங்களுக்கு?

வெளியீடுவீர்களா? பார்ப்போம் எந்த ஊடகம் பின்பற்றுகின்றது என்று?

என தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி அவரது முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளார்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories