ஊடகங்களுக்கு சவால் விடுக்கும் தேமுதிகவினர்

Published:

தமிழக அரசாங்கத்தின் செய்திகளை ஊடகங்கள் வெளியிடும்போது முதலமைச்சரின் புகைப்படத்திற்கு பதிலாக தமிழக அரசு முத்திரையையும் அதே போல் அரசியல் கட்சியைப் பற்றிய செய்திகளை வெளியிடும்போது அரசியல் கட்சியின் தலைவர் புகைப்படத்திற்கு பதிலாக அரசியல் கட்சியின் கொடியையும் வெளியிடும் தைரியம் உள்ளதா? என அனைத்து ஊடக நிறுவனங்களிடம் தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி என்பவர் அவரது முகநூல் பக்கத்தின் பதிவின் வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் மாலிக் அன்சாரியின் முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளதாவது :-

விளம்பரத்தை நம்பி பிழைப்பு நடத்தும் ஊடகங்களுக்கு சவால்…

தமிழக மக்களின் வரிப் பணத்தில், பல மனிதநேய உள்ளம் படைத்தவர்கள் தரும் முதலமைச்சர் நிவாரண நிதி பணத்தில் தமிழக அரசின் சின்னத்தை புறந்தள்ளி தன்னுடைய படத்தையே முன்னிறுத்துகிறார் ஜெயலலிதா…

ஏன் மேதகு அப்துல் கலாம் அவர்கள் பெயரில் கொடுக்கப்பட்ட விருதில் கூட ஜெயலலிதா படம்தான் பிரதானமாக பொறிக்கப்பட்டது. இதை எல்லாம் ஜெயலலிதா தவிர்க்கமாட்டார்தான்…

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

அரசு விளம்பரம் மற்றும் கட்சி விளம்பரம் என வருவாயை நம்பி நக்கி பிழைப்பு நடத்தும் விபச்சார ஊடகமே…

தமிழக அரசு சார்பாக கொடுக்கப்படும் நிவாரணத் திட்டங்களில் சலுகைககளில் விலையில்லா பொருள்களில் உள்ள ஜெயலலிதா படம் தெரியாதவாறு தமிழ்நாடு அரசு முத்திரையை முன்னிறுத்தி வெளியிட திராணி இருக்கிறதா ஊடகங்களுக்கு?

ஊடகங்களே! இதுதான் சரியான தருணம். உண்மையிலே அக்கரை இருந்தால் ஊடகங்கள் இதை செய்ய வேண்டும்…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் மட்டும் இதை எல்லாம் பின்பற்றுகிறார், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும்போது கொடி தோரணமோ, அவரின் புகைப்படமோ, வாழ்க கோஷமோ எதையுமே அவர் ரசிப்பதும் இல்லை, அனுமதிப்பதும் இல்லை…

நீங்கள் சொல்லலாம், தூத்துக்குடியில் கொடுத்த நிவாரணப் பையில் கேப்டன் படம் இருந்ததே என்று, அந்த நிகழ்ச்சி பெரும் மழை சென்னையை மூழ்கடிக்கும் முன்பே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி, பெரும் வெள்ளத்தால் விமான நிலையம் மூடப்பட்டதால் நிறுத்தி வைத்திருந்தார், விமான நிலையம் செயல்பட தொடங்கிய உடனே சென்று நிவாரணத்தை அளித்தார்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

ஆனால் இன்று விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் நிவாரணம் வழங்கும்போது முற்றிலுமாக அவரின் புகைப்படத்தை தவிர்த்தார்…

உண்மையிலேயே நான்காவது தூண் ஊடகங்கள் என்றால், மற்றவர்களை விமர்சிக்கும் ஊடகமே, அரசியல் கட்சிகள், தமிழக அரசு தரும் நிவாரண பொருள்களில் உள்ள முதல்வர் புகைப்படத்தை தவிர்த்து அரசு முத்திரையை முன்னிருத்தி செய்திகளை வெளியிட தைரியம் இருக்கா உங்களுக்கு?

வெளியீடுவீர்களா? பார்ப்போம் எந்த ஊடகம் பின்பற்றுகின்றது என்று?

என தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி அவரது முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளார்..

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img