December 5, 2025, 4:27 PM
27.9 C
Chennai

ராக்கெட்டை கட்டமைத்த இந்தியாவிற்கு சாக்கடையை கட்டமைக்க முடியாதா? : அறிவியல் அறிஞர் பொன்ராஜ்

ராக்கெட்டை கட்டமைத்த இந்தியாவிற்கு சாக்க டையை கட்டமைக்க முடியாதா?  என்று அறிவியல் அறிஞர்  பொன்ராஜ் கேள்வி எழுப்பி அவரது முகனூல் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

மேலும் பொன்ராஜ் அவரது முகனூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது :-  

கழிவு நீர் கலக்காத கால்வாய் வெட்டி, அதி திறன், வழிச்சாலை உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் மழைவெள்ள பிரச்சனைக்கு தீர்வு காண லாம் என இந்திய குடியரசு முன்னாள் தலைவர்மறைந்த  அப்துல் கலாம் கூறியதை குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றுமே இல்லாத குறைந்த மழைக்கு இத்தனை பாதிப்பா? ஏன் இந்த நிலைமை?மழை நீரை கடத்தி ஏரிகளுக்கு கொண்டு செல்ல சரியான மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு எங்கும் கிராமத்திலும் இல்லை, நகரத்திலும் இல்லை. ஏரிகள், குளங்கள் மக்களாலும் அரசாலும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளன. ஏரிகள், குளங்கள்,கண்மாய்கள் தூர்வாரப்படவில்லை. தமிழக நதிகளை இணைக்க எந்த ஒருமுயற்சியும் எடுக்கப்பட வில்லை. அதிதிறன் நீர்வழிச்சாலை ஏற்படுத்தப் படவில்லை.

2005ல் 130 செ.மீ மழை பெய்தது. அது சராசரி மழையின் அளவான 95செ.மீ மழையை விட 36.1 சதவீதம் அதிகம். அப்பொழுது 26 மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்தது. சென் னையில் மட்டும் 235 செ.மீ மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் தான் 67 செ.மீ மழை பெய்தது. அப்போது மிகப்பெரிய பொருள் சேதமும், உயிர் சேதமும் ஏற்பட்டது. அது மட்டுமல்ல, அனைத்து மழை நீரும் கடலில் சென்று கலந்து விட் டது.அந்த மழையில் 2005ல் தமிழக நதி களை இணைப்பதற்கும், தமிழகத்தில் அதி திறன் நீர் வழிச்சாலை அமைக்க வேண்டும் என்று சென்னை ராஜ் பவனில் அப்போதைய தமிழக முதல மைச்சர் ஜெயலலிதாவிடம் டாக்டர் அப்துல்கலாமும், அவரோடு நானும் அதிதிறன் நீர்வழிச்சாலை அமைப்பதின் தேவையை பற்றி ஆய்வறிக் கையை சமர்பித்தோம். அடுத்த முதலமைச்சர் கருணாநிதியிடமும் இதை தொடர்ந்து வலி யுறுத்தினோம். ஆனால், இதுவரை நதிகள் இணைக்கப்படவில்லை. மழைநீர்சேகரிப்பு கட்டமைப்பு எங்கும் உருவாக்கப்படவில்லை.அதி திறன் நீர் வழிச்சாலை உருவாக்கப்படவில்லை. இதுகுறித்து நதிகள் இணைப்பின் வல்லுநர் குழு உறுப்பினராகவும், நபாடுடெக் தலைவரும் பேராசிரியருமான ஏ.சி.காமராஜ் பார்க்காத அரசியல் தலைவர்கள் இல்லை.

அவரும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறார்.10 வருடம் கடந்து விட்டது. அனை வரும் நிறைவேற்றவில்லை.2005ல் 130 செ.மீ மழை சென்னை யில் பெய்த பொழுது ஏற்பட்ட வெள்ள சேதத்தை காட்டிலும், இன் றைக்கு 10 வருடம் கழித்து 2015ல் பெய்த15 செ.மீ. மழைக்கு தாங்காத சென் னையும் கடலூரும்தான் நமது ஆட்சி முறை நிர்வாகத்தின் அடையாளமாக விளங்குகிறது.விவசாய வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பு நீராதாரம், தொழில் முறை வளர்ச்சிக்கும் அடிப்படைத் தேவை தண்ணீர். ஆனால் இந்த சோத னையை தாண்டி நாம் வரமுடியுமா.ஆம், இப்படிபட்ட சோதனை களை தாண்டி தமிழகம் வரமுடியும் என்பது எனது நம்பிக்கை.இது ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் இல்லை. ராக்கெட்டை கட்டமைக்க தெரிந்த இந்தியாவிற்கு சாக்கடையை கட்டமைக்க முடியாதா. முடியும் ஆனால் லஞ்சம், ஊழல் அற்ற, தைரியமான அரசியல் தலைமையால் மட்டும்தான் இது சாத்தியம்.இதை தமிழ்நாட்டின் நகராட்சி, மாநகராட்சிகளில் செயல்படுத்த முடியாதது என்றில்லை. தமிழ்நாட்டை சிங்கப்பூராக்குவேன் என்ற கோஷங் களைக் கேட்டு கேட்டு ஓய்ந்து விட் டோம்.

சிங்கப்பூரில் ஏற்படுத்தப்பட்ட மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். சிங்கப்பூரில் கழிவுநீர் கலக்காத மழை நீர் சேகரிப்பு உரு வாக்கப்பட்டுள்ளது. ஒரு சொட்டு மழைநீரும் விரையம் இல்லை. கழிவு நீரும் மழைநீரும் கலக்கவும் இல்லை.இப்படி மழை நீரை சேமிப்போம். மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை உரு வாக்கி காட்டுவோம் என்று சொல் பவர்கள் இனி மேல் பஞ்சாயத்து நக ராட்சி, மாநகராட்சி தலைவர்களாக சட்டமன்ற உறுப்பினர், நாடாளு மன்ற உறுப்பினர்களாக வரட்டும் அப்படிப்பட்ட இலட்சியம் கொண்ட இளைஞர்கள் இந்த பதவிகளுக்கு வரவேண்டும். அதை மக்கள் உறுதி செய்தால் மட்டுமே தமிழக தண்ணீர் பிரச்சனைக்கு விடிவு காலம் பிறக்கும்.இதை செய்ய மக்கள் தயார் என்றால்தான் இந்தபிரச்சனைக்கு வழி பிறக்கும். என்று  வெ.பொன்ராஜ் அவரது முகனூல் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories