அ.தி.மு.க-வை சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க வில் விரைவில் இணைய திட்டம் போட்டு வருவதாக சமூக ஊடகங்களில்செய்தி வைரலாக
பரவிவருகிறது.
மேலும் வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் தகவலில் தெரிவித்துள்ளதாவது :-
அ.இ.அ.தி.மு.க கரூர் தலைமைக் கழக பேச்சாளர் ஜெயம் மூர்த்தி தலைமையில் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க விற்கு தாவ இருப்பதாக தகவல்.
ஜெயம் டி.வி யை காப்பாற்றவும், மீண்டும் தி.மு.க ஆட்சி தான் வர இருப்பதாகவும், அதில் கேபிள் டி.வி கார்ப்பேரஷன் தலைவராக ஜெயம் மூர்த்தியும், தமிழக போக்குவரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜியும் பணி நிரந்தரம் கொடுப்பதாக தி.மு.க நம்பக வட்டாரம் தெரிவித்துள்ளதாகவும் இரகசிய தகவல், இத்தகவலையடுத்து மு.க.ஸ்டாலினுடைய மருமகன் சபரீஸன், என்னுடைய மாமனாராவது தாத்தா கலைஞரை முதல்வராகவும், எனது மாமனார் துணை முதல்வராகவும் கனவு கண்டார், ஆனால் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்கள் இருக்கும் போதே தமிழக முதல்வர் சீட்டிற்கு ஆசை பட்டுள்ளார் என்பதை எண்ணி இரகசிய ஆலோசனை நடத்துவதாகவும் தகவல்.
என்று வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


