இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர் இந்தியாவில் உயிருடன் இருக்கிறார்?

Published:

கொழும்பு:

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த சாரதி இந்தியாவில் உயிருடன் இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
பூமிதுரை எனப்படும் டாக்ஸி சாரதியின் சடலம் அண்மையில் இலங்கைக் கடற்பகுதியில் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட சடலத்துடன் காணப்பட்ட அடையாள அட்டையின் அடிப்படையில் அந்தத் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், 41 வயதான சாரதி உயிருடன் இருப்பதாக செய்தி வெளியானது.

உயிரிழந்த அந்த நபர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை எனவும், ராமேஸ்வரத்தில் உயிரிழந்த நபரின் சடலம், இலங்கை கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் கியூ பிரிவினர் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்த அந்த நபரின் அடையாளத்தை உறுதி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தாம் உயிரிழந்து விட்டதாக வெளியான செய்தி தமக்கு அதிர்ச்சி அளித்ததாகவும், அந்த அடையாள அட்டை பத்து ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனதாகவும் இந்த அடையாள அட்டை மீட்கப்பட்ட சடலத்தில் கிடைத்தது எவ்வாறு என்பது தனக்குப் புரியவில்லை எனவும் பூமிதுரை தெரிவித்துள்ளார்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img