சிம்பு, அனிருத் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு : காவல்துறை ஆணையர் அமல்ராஜ்

Published:

 
பெண்களை மிக கேவலமாக சித்தரித்து பீப்’ பாடல்..பாடல் இயற்றி உள்ளதாக கோவை மாவட்ட ஜனநாயக சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத 3 பிரிவுகளின் கீழ் சட்ட ஆலோசனைகள் பெற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
 
மேலும் முறையாக வழக்கு விசாரணை நடைபெறும் என்றும் மாநகர காவல் ஆணையர் செய்தியாளர்களிடம் உறுதி அளித்துள்ளார்.
 
சமூகத்தை சீரழிக்கும் டாஸ்மாக்கை எதிர்த்து பாடியதற்காக மக்கள் பாடகர் கோவனை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் தள்ளிய தமிழக அரசு நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத், மீது பாலியல் வெறியோடு பெண்களை கொச்சை படுத்தி பாடல்அமைத்து வெளியிட்டதாக கூறி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய புரட்சிகர விடியல் பெண்கள் அமைப்பு போர்கொடி தூக்கி வாட்ஸ்ஆப்பில் தகவலை வாட்ஸ்ஆப்பில் பதிவிட்டு வைரலாக இன்று வைரலாக பரவவிட்டது.
 
இந்த நிலையில் கோவை மாவட்ட ஜனநாயக சங்க செயலாளர் ராதிகா மற்றும் நிர்வாகிகள் கோவை மாநகர காவல்துறை ஆணையாளரை சந்தித்து சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.
 
மேலும் பெண்களை மிக கேவலமாக சித்தரித்து பாடல் இயற்றி உள்ளதாக நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு எதிராக மாதர் சங்கத்தினர், சிம்பு – அனிருத் புகைப்படங்களை கிழித்தெறிந்தும் செருப்பால் அடித்தும் மாதர் சங்கத்தினர் தங்களது எதிர்ப்பை காட்டி ஆர்ப்பாட்டம் செய்ததால்மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பரபரப்பு நிலவியது.
 
சிம்புவின் குரலில், அனிருத் இசையமைத்ததாகச்சொல்லி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது ஒரு பாடல். பாடலின் ஆரம்ப வார்த்தைகளை செய்தி பதிவில் குறிப்பிட
முடியாத அளவுக்கு மிக மோசமான வார்த்தைகளுடன் உள்ளது. அந்த பாடல்.வார்த்தைகளை பீப் ஒலி கொண்டு மறைக்க முயன்றிருந்தாலும், வார்த்தைகள் என்ன என்பதை எளிதில் புரிந்து கொள்ளும் அளவில் தான் உள்ளது.
 
இந்நிலையில் சமூக ஊடகங்களில் ஆபாசமான கருத்துக்களை பகிர்ந்தது பெண்களை இழிவுபடுத்தி பாடல் இயற்றியது, ஆபாசமாக பாடியது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது சட்ட ஆலோசனைகள் பெற்று ஜாமீனில் வெளிவரமுடியாத 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

 

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img