மாணவர்களை பூட்ஸ் காலால் மிதித்து கொடூரமாக தாக்கி அவமானப்படுத்திய பள்ளியின் தாளாளர்

Published:

 
திருச்சி மாவட்டம் உறையூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் தாளாளர் அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களை தொடர்ந்து வெகு நாட்களாக மிகக் கொடூரமாக தாக்கி அவமானப்படுத்தி கொடுமைப்படுத்தி வருவதாக வாட்ஸ் ஆப் பதிவின்மூலம் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
தாளாளர் மாணவர்களை கொடுமைப்படுத்துவதை காணொளியாக பதிவிட்டு பள்ளியில் பயிலும் மாணவர்களின் உயிரைக் காப்பாற்ற கோரிக்கை விடுத்து வாட்ஸ் ஆப்பில் அந்த
மாணவர்கள் வைரலாக பரவ விட்டுள்ளனர்.
 
அந்த பள்ளியின் தாளாளர் இரு மாணவர்களை ஒருவருக்கு ஒருவர் மற்றொருவரின் இரு காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடச் சொல்லியும், மாணவர்களின் தலை முடியை இழுத்தும், அவரது பூட்ஸ் காலால் மிதித்தும் மிகக் கொடூரமாக தாக்கியுள்ளார்.
 
மேலும் அந்த இரு மாணவர்களுடன் பயிலும் சக மாணவர்களை அழைத்து அவர்கள் இருவர் தோள்மீதும் ஏறி நிற்கச் சொல்லி கட்டளையிடுவதும் காணொளி பதிவின் மூலம் அறியமுடிகிறது.
 
மாணவர்களை மிகக் கொடூரமாக தாக்கி, கொடுமைப்படுத்தி, அவமானப்படுத்திய அந்த பள்ளியின் தாளாளர்மீது மாவட்ட கல்வி அதிகாரி சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு .
 
வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img