மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா: காங்கிரஸ் கொண்டுவந்தது என ரவிசங்கர் பிரசாத் விளக்கம்

ravi-shankar-prasad

புது தில்லி:

மாநிலங்களவைத் தேர்தலில் ‘நோட்டா’ என்பதை, காங்கிரஸ் ஆட்சியின் போதே கொண்டுவந்தாயிற்று என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

குஜராத் மாநிலத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு 3 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஆக. 8ஆம் தேதி நடக்கிறது. இதில், பாஜக.,வுக்கு 2 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான உறுப்பினர் பலம் உள்ளது. ஆனால், தனது பலத்தை மீறி 3ஆவது இடத்துக்கும் வேட்பாளரை நிறுத்தியுள்ளது பாஜக.,

இதனிடையே, வாக்குச்சீட்டில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதைத் தெரிவிக்கும் ‘நோட்டா’ இடம் பெறும் என்று தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு, தங்கள் கட்சிக்கு எதிராக அமையும் என்று காங்கிரஸ் கூறி வருகிறது. எனவே, ‘நோட்டா’ இடம்பெறக் கூடாது என்று தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. ‘நோட்டா’ பகுதியை வாக்குச் சீட்டில் இருந்து நீக்க உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், ஆளும் பாஜக.,வும் ‘நோட்டா’வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தது. இதனிடையே காங்கிரஸ் தாக்கல் செய்த மனு தொடர்பாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், குஜராத் மாநிலங்களவை தேர்தலில் நோட்டா இடம் பெற இடைக்கால தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து, காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவையும் ஏற்க மறுத்துவிட்டது. மேலும், கடந்த 2015ஆம் ஆண்டே, இந்தத் தேர்தலில் நோட்டா அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இவ்வளவு நாட்கள் கழித்து இப்போது எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியது உச்ச நீதிமன்றம். பின் தேர்தல் ஆணையம் பதிலளிக்கக் கோரி, இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ALSO READ:  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இந்நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசியபோது, “மாநிலங்களவைத் தேர்தலில் ‘நோட்டா’ காங்கிரஸ் ஆட்சியின் போதே கொண்டுவரப்பட்டது. நோட்டா வாக்களிப்பு முறையில் தேர்வு செய்யப்பட்ட அதிகமான காங்கிரஸ் எம்.பி.க்கள்தான் இப்போது அவையில் உள்ளனர். அவர்கள் மூன்று ஆண்டுகளாக அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கேள்வி எழுப்புகிறார்கள். மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா இடம் பெறுவது தொடர்பான 2014ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியான அறிவிப்பைக் கூட அவர்கள் பார்க்கவில்லை. மத்தியில் 2014 மே மாதம்தான் மோடி அரசு ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸ் தலைமையிலான அரசின் விதிமுறையே இப்போதும் செயல்படுத்தப் படுகிறது” எனக் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories