December 10, 2025, 12:39 PM
28.2 C
Chennai

“இரண்டுக்கும் மாவு ஒண்ணுதான்” (ஜிலேபிக்கு அத்வைத விளக்கம்’)

10374915 784535618232615 626680789139441560 n - 2025

“இரண்டுக்கும் மாவு ஒண்ணுதான்”
(ஜிலேபிக்கு அத்வைத விளக்கம்’)

(“இங்கே இருக்கிறவாளுக்கு உப்பு உறைப்பு வேணும், வடை தட்டி சாத்தறா.
வடக்கத்திக்காராளுக்கு தித்திப்பு இஷ்டம்,ஜிலேபி பண்ணி சாத்தறா”)

சொன்னவர்; டி.வி.சுவாமிநாதன் I.A.S. (ஓய்வு)
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

புது டெல்லியில் இர்வின் ரோடிலுள்ள ‘ஹனுமான் மந்திரில்’ ஒவ்வொரு
செவ்வாய்க்- கிழமையும்,’மங்கள்’என்று
கூறி பக்தர்கள் பெருந்திரளில் குழுமுவர். நீண்டு நிற்கும் ‘க்யூ’ வரிசையை மாலை
ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை காணலாம்.ஆலயத்தின் நுழைவாயிலின் இருவசமும்
மிட்டாய்க் கடைகள்.

பக்தர்கள் தொன்னைகளிலும், தட்டுகளிலும் லட்டு, பூந்தி,பேடா நிவேதிப்பதற்காக
வாங்கிச் செல்வர். பண்டிட்ஜி, மணி ஒலித்து அர்ப்பணித்து நெற்றியில் சிந்தூரத்
திலகமிடுவார். ‘ஜெய்ராம்ஜி’ என்ற த்வனி
இரு செவிகளையும் நிறைக்கும்- குருவாயூரில் ‘நாராயணா’ உச்சாரணம் போல்.

ஒரு செவ்வாய்க்கிழமை மாலை ஹனுமான் மந்திரில் தரிசிக்கச் சென்றிருந்த நான்
ஆஞ்சநேயருக்கு ஜிலேபி மாலை அணிவித்திருந்ததைப் பார்த்து வியப்புற்றேன்.

மறுநாள் சென்னை சேர்ந்து வழக்கம் போல் சின்னக் காஞ்சி சிவாஸ்தானம் போனேன்.
காஞ்சி மாமுனிவர்தரிசனம் நாடி..

ஸ்ரீ பெரியவாளிடம் வடைமாலைக்குப் பதில் அனுமனுக்கு ஜிலேபி மாலை
சார்த்தியிருந்ததை விவரித்தேன்.

உடனே தவச்ரேஷ்டர் அத்வைத சிகரத்தை எட்டிவிட்டார்.

“இரண்டுக்கும் மாவு ஒண்ணுதான்” என்ற அருள்வாக்கால்.

ஆம், இரண்டுக்கும் ஆதார மூலப்பொருள் உளுந்து மாவுதானே !

உடனேயே நமது நிலைக்கு இறங்கி வந்து,

“இங்கே இருக்கிறவாளுக்கு உப்பு உறைப்பு வேணும், வடை தட்டி சாத்தறா.
வடக்கத்திக்காராளுக்கு தித்திப்பு இஷ்டம்,ஜிலேபி பண்ணி சாத்தறா” என்றார்கள்.

‘என்னைக் காப்பாற்ற நீ நடந்து வந்தாயா ஸ்ரீ ராமா’ என்று கசி(னி)ந்துருகினார்
தியாகப்ரம்மம். (நனு பாலிம்ப நடசி வச்சிதிவோ) எங்களைக் காப்பாற்ற எழுந்து
நடந்து வரவேண்டும் தயாநிதியே என்று எனது- நம்முடைய-பிரார்த்தனையுடன் இந்த
நினைவு மலர்களை தவச்ரேஷ்டரின் பத்மபாதங்களில் அர்ச்சிக்கிறேன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – டிச.10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

போலி தங்கக் காசுகளை குறைந்த விலைக்கு தருவதாகக் கூறி மோசடி; 4 பேர் கைது!

ராஜபாளையத்தில் தங்க காசுகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த மூதாட்டி உள்பட நான்கு முதியவர்கள் கைது!

வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் ஆ.ராசா பேச்சுக்கு இந்து முன்னணி கண்டனம்!

வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சுக்கு இந்து...

Front-Row Seats in the Living Room: Reimagining Margazhi for the Rasika at Home!

It is that time of the year again. The Magical Margazhi Music Season has descended upon Chennai, a city whose December air is thick with raga, rhythm, and reverence.

பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – டிச.10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

போலி தங்கக் காசுகளை குறைந்த விலைக்கு தருவதாகக் கூறி மோசடி; 4 பேர் கைது!

ராஜபாளையத்தில் தங்க காசுகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த மூதாட்டி உள்பட நான்கு முதியவர்கள் கைது!

வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் ஆ.ராசா பேச்சுக்கு இந்து முன்னணி கண்டனம்!

வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சுக்கு இந்து...

Front-Row Seats in the Living Room: Reimagining Margazhi for the Rasika at Home!

It is that time of the year again. The Magical Margazhi Music Season has descended upon Chennai, a city whose December air is thick with raga, rhythm, and reverence.

பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

Entertainment News

Popular Categories