2வது நாளாக ரெய்டு! சொகுசு விடுதியில் இருந்த 3 குஜராத் எம்.எல்.ஏ.,க்கள் மருத்துவமனையில்!

Rs-five-crore-cash-recovered-from-the-Delhi-residence

பெங்களூர்:

கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார் இல்லத்தில் 2ஆவது நாளாக இன்றும் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

மின்சாரத் துறை அமைச்சருக்குக் கொடுக்கப்பட்ட திடீர் ’ஷாக்’ என்று இந்த வருமான வரித் துறை சோதனை குறித்துக் கூறுகின்றனர். இதனிடையே குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர் அமைச்சர் சிவக்குமார் என்பதால், அவரது வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 64 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தியதாக, ஆளும் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.

இந்த சோதனையில் ரூ.10 கோடி மற்றும் ஏராளமான நகைகள், ஆவணங்கள் சிக்கின. இந்த சோதனை குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி துமளி கிளப்பி பிரச்னையை ஏற்படுத்தும் அளவுக்கு இந்த சோதனை அமைந்துவிட்டது. இதனிடையே இரண்டாவது நாளாக இன்றும் சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனால் கோபம் அடைந்த டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள், வருமான வரித்துறை சோதனை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், வருமானவரித் துறை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த சோதனை நடவடிக்கை குறித்து வெகு நாட்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது என்றும், வரி ஏய்ப்பு, சொத்துக் குவிப்பு, கணக்கில் காட்டாத பணப் புழக்கம் என்று பல்வேறு புகார்கள் வந்த நிலையில், சிவகுமார் வீட்டில் சோதனை நடத்த திட்டமிட்டதாகவும், ஆனால் இந்த நேரம் பார்த்து குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருக்கு அனுப்பபட்டு, அவர்களை டிகே.சிவகுமார் தன் கட்டுப்பாட்டில் அடைக்கலம் கொடுத்ததாகவும், எனவே இரண்டுக்கும் தொடர்பில்லை என்றும் கூறினர். காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்த கதை என்று கூறப்படுவது போல், இந்த சோதனை நடவடிக்கை ஆனதாகக் கூறப்படும் நிலையில், இந்த சோதனை நடவடிக்கையின் பின்னணியில் மாநில அரசியல் இருப்பதாக அரசியல் மட்டத்தில் பேச்சு எழூந்துள்ளது. குறிப்பாக, முதல்வர் சித்தராமையா இதன் பின்னணியில் இருக்கக் கூடும் என்றும் பேசப்படுகிறது.

வரும் ஆண்டில் மாநிலத்தில் பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், மாநிலத்தில் மின்சாரத் துறை அமைச்சர் சிவக்குமார் பவர்புல்லாக வளர்ந்து வந்திருக்கிறார். இங்கே அதிகார அரசியல் தலை தூக்கியுள்ளது. இதனால், சித்தராமையா வைத்த குறியாகக் கூட இருக்கலாம் என்று பேசப்படுகிறது.

இந்நிலையில், சொகுசு விடுதியில் தங்கியிருந்த குஜராத் எம்.எல்.ஏக்களில் 3 பேருக்கு இன்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டனர். பெங்களூரு கேங்கேரி பிஜிஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் வெளி நோயாளிகளாக சிகிச்சை அளிக்கப் பட்டு அனுப்பப் பட்டனர்.

வருமான வரித் துறை சோதனையை அடுத்து, குஜராத் எம்.எல்.ஏ.க்களில் பலருக்கு பயம் தொற்றிக் கொண்டதாகவும், தாங்கள் தான் அடுத்த இலக்கு என்று அவர்கள் கருதுவதாகவும், அதன் காரணத்தாலேயே மன அழுத்தம் ஏற்பட்டு உடல் நலக்குறைவு கண்டதாகவும் கூறப்படுகிறது. ஈகிள்டன் ரிசார்ட்டில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்கள் பலரும் இதனால் தங்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்லவே விரும்புவதாகவும் கூறப்படுவதால், இந்த விவகாரத்தில் இப்போது பரபரப்புத் திருப்பம் எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

Topics

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

Entertainment News

Popular Categories