தினமலரில் “தப்பிலித்தனமான” புளுகு செய்தி : தி.மு.க. தலைவர் கருணாநிதி

Published:

தி.மு.க. தலைவர் கருணாநிதி மந்திரிக்கப்பட்ட சிவப்பு கயிற்றை கட்டியிருப்பதாக வெளியிட்டுள்ள செய்தி குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி அளித்துள்ள பதில்கள் :-

கேள்வி :- கடவுள் மீது உங்களுக்கு நம்பிக்கை வந்து விட்டது என்றும், அதன் காரணமாக ஆந்திராவிலிருந்து யாரோ அனுப்பிய மந்திரிக்கப்பட்ட சிவப்பு கயிற்றை கையிலே கட்டியிருப் பதாகவும் ஒரு செய்தி “தினமலர்” நாளேட்டில் முதல் பக்கத்தில் வெளி வந்துள்ளதே?

கருணாநிதி:- “தினமலர்” புளுகுகளில் இதுவும் ஒன்று! 13-12-2015 அன்று “வேலூரில் உள்ள பிரபல மடாதிபதி அறிவுரையைக் கேட்டு, சிவப்பு நிற பட்டையுடன் கூடிய, கைக்கடிகாரத்தை கருணாநிதி அணிந்துள்ளார். இக் கடிகாரத்தை சிறப்பு பூஜை செய்து அணிந்துள்ளார்” என்று வெளியிட்டதோடு, யார் யாரையோ ஜோதிடர்களை யெல்லாம் சந்தித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றெல்லாம் வெளியிட்டிருந்தது. அதே நாளேடு, இன்று அந்தச் செய்தியில் மாற்றம் செய்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி , தன் இடது கையில் ஒரு வாரமாக சிவப்பு பட்டையுடன் கூடிய கைக்கடிகாரத்துடன், ஆந்திர மாநில தர்காவில் இருந்து வந்த மந்திரிக்கப்பட்ட சிவப்பு கயிறையும் சேர்த்துக் கட்டி யிருப்பதாகவும், அதைப் பற்றி தி.மு.க. வட்டாரங்கள் கருத்து கூறியதாகவும் வெளியிட்டுள்ளது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

என் கையில் எந்தக் சிவப்பு கயிறும் கிடையாது. கையிலே உள்ள சிவப்பு நிறப் பட்டையுடன் கூடிய கைக்கடிகாரம் நான் ஓராண்டிற்கு மேலாக கையிலே அணிந்திருக்கும் அதே கடிகாரம் தான்! அதற்கும் எந்த முக்கியத்துவமும் கிடையாது.

யாரோ ஒரு சிலர் இதனை நம்பக் கூடும் என்பதற்காக “தினமலர்” இப்படிப்பட்ட செய்தியை வெளியிடுகிறதோ, என்னவோ? “தினமலர்” ஆசிரியர், கிருஷ்ணமூர்த்திக்குத் தெரியாமல் இப்படிப்பட்ட செய்தி வெளி வந்திருக்காது என நினைக்கிறேன். “நமது நிருபர்” என்ற பெயரால் இப்படிப்பட்ட “தப்பிலித்தனமாக” செய்திகளை வெளியிடுவோர் மீது இனியாவது “தினமலர்” ஆசிரியர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.’’ என கருணாநிதி பதில் அளித்துள்ளார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img