பேச்சைக் குறைங்கப்பா: பாஜக., தலைவர்களுக்கு மோடி அறிவுரை!

Published:

புவனேஸ்வர் : 

பா.ஜ., தலைவர்கள் பேச்சை குறைப்பது எப்படி என பாடம் கற்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

ஒடிசாவில் நடந்த பா.ஜ., செயற்குழுவின் 2வது நாளில் பேசிய பிரதமர் மோடி, கட்சி தலைவர்கள் எங்கு, எப்படி அமைதி காக்க வேண்டும் என சில அறிவுரைகளை வழங்கினார். அப்போது,  பா.ஜ., தலைவர்கள் பேச்சில் கவனம் செலுத்துவது அவசியம் என்று கூறினார்.

மேலும்,  நான் ஒவ்வொரு முறை டிவி பார்க்கும் போதும் யாராவது ஒரு பா.ஜ., தலைவர் பேட்டி கொடுக்கிறார். சில சமயங்களில் அவர்கள் பேசுவது சர்ச்சை ஏற்படுத்தும் விதத்திலேயே உள்ளது. எப்படி அமைதி காப்பது என்பது பற்றி நீங்கள் பாடம் கற்க வேண்டும்.

யார் மைக்கை நீட்டினாலும் எப்போதும் ஏதாவது சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை.

சர்ச்சைகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தும் வகையில் பேசுவதை கட்சியால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

தலைவர்கள் தங்களின் வாய்க்கு பூட்டு போட கற்றுக் கொண்டு, கட்சி வேலைகளை மட்டும் பார்த்தால் போதும் என்று எச்சரிக்கும் வகையில் அறிவுரை வழங்கியுள்ளார். 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img