வாடிப்பட்டி:
வங்கக்கடலில் காற்றழுத்ததாழ்வுநிலை உருவாகி உள்ளதால் பாம்பன்துறைமுகத்தில் 2ம்எண் புயல்எச்சரிக்கைகூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அந்தமான் தீவு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.
இது குறைந்த காற்றழுத்ததாழ்வு மண்டலமாக மாறம் வாய்ப்பு உள்ளது. அது வடக்கு, வடகிழக்குபகுதியில் நகர்ந்து நாளை பர்மா அருகே கரையை கடக்கிறது. இதனால் தமிழகத்திற்கு எந்தவிதபாதிப்பும் இல்லை. மதுரை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மழையில்லாததாலும் தற்போது பங்குனி மாதம் முதல் கோடைவெப்பம் கொளுத்துவதாலும் ஏரி, கண்மாய், குளங்கள் எல்லாம் வறண்டு காணப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை 3.30மணிக்கு வாடிப்பட்டி அருகே சிறுமலை பகுதியில் மேகங்கள் திடீர் என்று ஒன்றுதிரண்டு நெருப்பைகக்கும் சூரியகதிர்களை மறைத்தன. மேலும் மிதமாக தொடங்கி சூறைகாற்றுடன் கூடிய பலத்தமழை 4மணியிலிருந்து 5மணிவரை பெய்தது. இந்தமழை சிறுமலை கிராமங்கள் குலசேகரன்கோட்டை, விராலிப்பட்டி, செம்மினிப்பட்டி, கச்சைகட்டி, குட்லாடம்பட்டி பகுதியிலும் வாடிப்பட்டி பஸ்நிலையம் மற்றும் நகர்புறபகுதிகளில் மட்டும் பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளுமையான சூழ்நிலை உருவானது. மேலும் தாதம்பட்டி மந்தை, சந்தை, பேரூராட்சிஅலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கிநின்றது.
செய்தி: ரவிசந்திரன், மதுரை



