பஹ்ரைனில் முதல்முறையாக… இந்தியாவின் ‘ரூபே கார்டு’ பயன்படுத்திய மோடி!

modi in bahrain - 2026

பஹ்ரைன் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள கோயிலில் முதல் முறையாக ரூபே கார்டினை பயன்படுத்தி பிரசாதம் வாங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மூன்று நாடுகளுக்கு ஐந்து நாள் பயணமாக சென்றுள்ளார் பிரதமர் மோடி. இந்த பயணத்தில் முதல் கட்டமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்றார். அங்கே ரூபே அட்டையின் வர்த்தக பயன்பாட்டை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, பிரான்ஸுக்கும் அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி பஹ்ரைனுக்கும் சென்றார். அங்குள்ள மனாமா பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்ற மோடி, ரூபே (RuPay) அட்டையைப் பயன்படுத்தி, பிரசாதம் வாங்கினார்.

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை முன்னிறுத்தி வருகிறார் பிரதமர் மோடி! பஹ்ரைனிலும் இந்தியாவின் அட்டையான ரூபே.,யை அறிமுகப் படுத்தியுள்ளார்.

முன்னதாக, பூடான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் பின்னர் இரு தினங்களுக்கு முன்னர் யு.ஏ.இ.,யும் ரூபே கார்டில் இணைந்தது.

பஹ்ரைனில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீநாத்ஜி கோயிலுக்குச் சென்ற பிரதமர் மோடி இன்று அங்கே இறைவனை வழிபட்டார். பிறகு தனது பஹ்ரைன் பயணத்தை முடித்துக் கொண்டு, ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்ள பிரான்ஸ் நாட்டில் உள்ள பியாரிட்ஸ் நகருக்கு சென்றார்.

ALSO READ:  FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

பிரதமர் நரேந்திர மோடி பஹ்ரைனில் உள்ள பழமையான இந்து கோவிலில், 1.6 மில்லியன் பஹ்ரைன் தினார் கோயில் மறுசீரமைப்பு திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை இன்று தொடங்கி வைத்தார்.

மோடி தனது மூன்று நாள் வளைகுடா பயணத்தை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் பிரான்சுக்கு பறந்து பியாரிட்ஸில் நடந்த ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.

modi in bahrain2 - 2026

முன்னதாக, பிரதமர் ஞாயிற்றுக்கிழமை இன்று காலை மனாமாவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் பிரார்த்தனை செய்தார், மேலும் இந்திய சமூகத்தினருடன் உரையாடினார்.

கோவில் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த ஹினா கஜ்ரியா கூறிய போது, கோயில் புதுப்பித்தல் இந்திய சமூகத்திற்கு முக்கியமானது! இது ஒரு பழங்கால கோயில். இந்த ஆண்டு மார்ச் மாதம், பஹ்ரைனின் பாட்டியா சமூகத்தால் நிறுவப்பட்ட கோயிலின் 200 வது ஆண்டு விழாவை நாங்கள் கொண்டாடினோம்.”

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

“இப்போது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அதை புதுப்பிக்க விரும்புகிறோம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். மூல மூர்த்தி தெய்வம் அப்படியே இருக்கும், மேலும் கோயிலைச் சுற்றியுள்ள வளாகத்தை உருவாக்குவோம், இதனால் வழிபாட்டுக்கு அதிக இடம் கிடைக்கும்” என்றார் கஜ்ரியா !

சனிக்கிழமை இரவு, தேசிய அரங்கத்தில் இந்திய சமூகத்தின் 20,000 பேர் கொண்ட கூட்டத்தில் மோடி உரையாற்றினார்! அங்கு அவர் தமது அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார். இந்த விஜயத்தின் போது, ​​மதிப்புமிக்க ‘மறுமலர்ச்சியின் கிங் ஹமாத் விருது’ மோடிக்கு வழங்கப்பட்டது.

“மறுமலர்ச்சியின் கிங் ஹமாத் விருது வழங்கப்பட்டதற்கு நான் மிகவும் மரியாதைக்குரியவனாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் உணர்கிறேன். 1.3 பில்லியன் இந்தியர்கள் சார்பாக இந்த மதிப்புமிக்க க கௌரவத்தை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories