பஹ்ரைனில் முதல்முறையாக… இந்தியாவின் ‘ரூபே கார்டு’ பயன்படுத்திய மோடி!

modi in bahrain - 2026

பஹ்ரைன் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள கோயிலில் முதல் முறையாக ரூபே கார்டினை பயன்படுத்தி பிரசாதம் வாங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மூன்று நாடுகளுக்கு ஐந்து நாள் பயணமாக சென்றுள்ளார் பிரதமர் மோடி. இந்த பயணத்தில் முதல் கட்டமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்றார். அங்கே ரூபே அட்டையின் வர்த்தக பயன்பாட்டை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, பிரான்ஸுக்கும் அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி பஹ்ரைனுக்கும் சென்றார். அங்குள்ள மனாமா பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்ற மோடி, ரூபே (RuPay) அட்டையைப் பயன்படுத்தி, பிரசாதம் வாங்கினார்.

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை முன்னிறுத்தி வருகிறார் பிரதமர் மோடி! பஹ்ரைனிலும் இந்தியாவின் அட்டையான ரூபே.,யை அறிமுகப் படுத்தியுள்ளார்.

முன்னதாக, பூடான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் பின்னர் இரு தினங்களுக்கு முன்னர் யு.ஏ.இ.,யும் ரூபே கார்டில் இணைந்தது.

பஹ்ரைனில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீநாத்ஜி கோயிலுக்குச் சென்ற பிரதமர் மோடி இன்று அங்கே இறைவனை வழிபட்டார். பிறகு தனது பஹ்ரைன் பயணத்தை முடித்துக் கொண்டு, ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்ள பிரான்ஸ் நாட்டில் உள்ள பியாரிட்ஸ் நகருக்கு சென்றார்.

பிரதமர் நரேந்திர மோடி பஹ்ரைனில் உள்ள பழமையான இந்து கோவிலில், 1.6 மில்லியன் பஹ்ரைன் தினார் கோயில் மறுசீரமைப்பு திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை இன்று தொடங்கி வைத்தார்.

மோடி தனது மூன்று நாள் வளைகுடா பயணத்தை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் பிரான்சுக்கு பறந்து பியாரிட்ஸில் நடந்த ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.

modi in bahrain2 - 2026

முன்னதாக, பிரதமர் ஞாயிற்றுக்கிழமை இன்று காலை மனாமாவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் பிரார்த்தனை செய்தார், மேலும் இந்திய சமூகத்தினருடன் உரையாடினார்.

கோவில் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த ஹினா கஜ்ரியா கூறிய போது, கோயில் புதுப்பித்தல் இந்திய சமூகத்திற்கு முக்கியமானது! இது ஒரு பழங்கால கோயில். இந்த ஆண்டு மார்ச் மாதம், பஹ்ரைனின் பாட்டியா சமூகத்தால் நிறுவப்பட்ட கோயிலின் 200 வது ஆண்டு விழாவை நாங்கள் கொண்டாடினோம்.”

“இப்போது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அதை புதுப்பிக்க விரும்புகிறோம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். மூல மூர்த்தி தெய்வம் அப்படியே இருக்கும், மேலும் கோயிலைச் சுற்றியுள்ள வளாகத்தை உருவாக்குவோம், இதனால் வழிபாட்டுக்கு அதிக இடம் கிடைக்கும்” என்றார் கஜ்ரியா !

சனிக்கிழமை இரவு, தேசிய அரங்கத்தில் இந்திய சமூகத்தின் 20,000 பேர் கொண்ட கூட்டத்தில் மோடி உரையாற்றினார்! அங்கு அவர் தமது அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார். இந்த விஜயத்தின் போது, ​​மதிப்புமிக்க ‘மறுமலர்ச்சியின் கிங் ஹமாத் விருது’ மோடிக்கு வழங்கப்பட்டது.

“மறுமலர்ச்சியின் கிங் ஹமாத் விருது வழங்கப்பட்டதற்கு நான் மிகவும் மரியாதைக்குரியவனாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் உணர்கிறேன். 1.3 பில்லியன் இந்தியர்கள் சார்பாக இந்த மதிப்புமிக்க க கௌரவத்தை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Entertainment News

Popular Categories