நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் இணையதளத்தில் தேர்தல் – 2016 கருத்துகணிப்பு : திமுக கூட்டணிக்கு அமோக ஆதரவு

Published:

 
தமிழகத்தில் வருகிற 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெரும் அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான நமது எம்.ஜி.ஆர் செய்தி இணையதளத்தில் இன்று 15-12-2015 கருத்துகணிப்பு நடத்தியதாக வாட்ஸ்ஆப்பில் வைரலாக தகவல் புகைப்படப் ஆதாரத்துடன் பரவிவருகிறது.
 
வைரலாக பரவிவருல் தகவலில் தெரிவித்துள்ளதாவது :-
 
அடுத்தடுத்த பரபரப்புகள்…
 
நமது எம்.ஜி.ஆர் இணையதளத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு என கேட்டிருந்தார்கள்..அதற்கு 80 சதவிகிதத்திற்கும் மேலானோர் திமுக கூட்டணி வெற்றி பெறும் என பதிவு செய்யப்பட்டிருந்தது.
 
இது பற்றிய தகவல்கள் நிருபர்கள் மூலம் கசிந்தவுடன் சில நிமிடங்களில் அந்த இணையதளத்தையே முடக்கி விட்டார்கள்..பின்னர் 5 நிமிடங்கள் கழித்து இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது. ஆனால் இந்த முறை தேர்தல் கருத்து கணிப்பு பதிவு இல்லை..அதற்கு பதிலாக மக்கள் கருத்து..இந்த இணையதளத்தை பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள் என்று மாற்றிவிட்டார்கள்..
 
டாக்டர் நமது எம்.ஜி.ஆர் இதழ், 2016 தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெறும் என்று இணையதளத்தில் கருத்துகணிப்பு எடுத்து வருகிறது. இதில் சுவாரசியம் என்னவென்றால், 85% பேர் தி.மு.க கூட்டணி வெற்றி பெரும் என்று வாக்களித்துள்ளனர். வெறும் 12.92% ஆதரவு மட்டுமே அ.தி.மு.கவுக்கு கிடைத்துள்ளது.
images india 20151215063512 - 2026
 
 
எப்படியோ இணையதள பொறுப்பாளர்கள் நீக்கப்படுவது மட்டும் உறுதி.. என வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

 

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img