எல்லாம் தெரிந்தவர் கேப்டன் விஜயகாந்த்! எவரும் பாடம் எடுக்கவேண்டாம்

Published:

 
எல்லாம் தெரிந்தவர் கேப்டன் விஜயகாந்த்!. “அரசியல் விமர்சகர்” “சமூக ஆவலர்” என்ற போர்வையில் என்ற அவருக்கு எவரும் போர்வையில் பாடம் எடுக்கவேண்டாம்..
என தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி என்பவர் அவரது முகநூல் பக்கத்தின் பதிவின் வாயிலாக கூறியுள்ளார்.
 
மேலும் மாலிக் அன்சாரியின் முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளதாவது :-
 
ஊடகங்களில் பங்கேற்கும்…
“அரசியல் விமர்சகர்கள்”
“சமூக ஆவலர்கள்” போன்ற அடையாளத்துடன் பங்கேற்போருக்கு வேண்டுகோள்…
‪#‎வணக்கம்‬…
 
விவாதங்களில் மக்களின் தேவை, மக்களின் நலன், சமூக சீர்திருத்தம், போன்றவைகளை முன்னெடுத்து கருத்துக்களை சொல்லுங்கள்…
 
அரசியல் கட்சிகளை தூக்கி பிடிப்பது, தூக்கி போட்டு மிதிப்பது, அதன் வளர்ச்சியில் அக்கரை கொள்வது, வளச்சியை தடுப்பது போன்ற கருத்துக்களை முன் வைக்காதீர்கள், அதை கட்சியின் அடையாளத்துடன் வருபவர்களின் வேலை அது…
 
இதை ஏன் சுட்டிகாட்டுகிறேன் என்றால், தேமுதிகவை பற்றிய விவாதங்களில் ஈடுபடும் சமூக அரசியல் ஆவலர்கள், மக்களின் தேவைகளை, நாட்டின் வளர்ச்சியை மனதில் கொள்ளாமல், அரசியல் கட்சிகளின் லாப நஷ்டத்தைப்பற்றி, ஓட்டு வங்கியை பற்றி, அக்கரையுடன் விவாதிக்கிறீர்கள் அதை விட்டு விட்டு, மக்களுக்காக கட்சிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், இந்த தேர்தலில் மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்று மக்களை சுற்றியே கருத்துக்களை பதிவு செய்யுங்கள்…
 
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மக்களுக்காக, மக்களின் தேவைக்காக அரசியல் கட்சி ஆரம்பித்தவர், மக்களின் நலனையே கவனத்தில் கொள்பவர்…
எவர் கட்சியையும் தூக்கி நிறுத்தவோ, எந்த கட்சியையும் அழிப்பதோ நோக்கம் அல்ல, முழுக்க முழுக்க மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே உருவான இயக்கம் தேமுதிக…
எவரும் கேப்டன் அவர்களுக்கு “அரசியல் விமர்சகர்” “சமூக ஆவலர்” என்ற போர்வையில் பாடம் எடுக்கவேண்டாம்…
‪#‎நன்றி‬.
 
என தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி அவரது முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளார்
ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img