2016 செப்.24ல் தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும்: போப் பிரான்சிஸ் அறிவிப்பு

Published:

பாரிஸ்:

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார். அவருக்கான இந்த புனிதர் பட்டம் வரும் 2016ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி, வழங்கப்பட உள்ளது. இதனை கத்தோலிக்க செய்தித்தாள் ஒன்று செய்தியாக வெளியிட்டு உள்ளது.

யூகோஸ்லாவியா நாட்டில் ஸ்கோப்ஜி என்ற சிறு கிராமத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் தெரசா. 1910 ஆகஸ்ட் 27-ஆம் நாளில் பிறந்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர். தாயால் வளர்க்கப்பட்டார்.

1929-ல் இந்தியா வந்தார். லோரட்டோ மடத்தின் கொல்கல்கத்தா கிளையில் இருந்து கொண்டு பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றினார். ஆதரவற்ற முதியோர்களுக்கு அடைக்கலம் தந்து, தொழு நோயாளிகளுக்கு `ப்ரேம் நிவாஸ்’ இல்லம் தொடங்கினார்.

மத்திய அரசு அன்னை தெரசாவுக்கு 1980-ல் `பாரத ரத்னா’ விருது வழங்கிக் கௌரவித்தது. அவரின் பணியைப் போற்றும் விதமாக உலக அமைதிக்கான நோபல் பரிசு (1979) அவருக்கு வழங்கப்பட்டது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

தெரசா 1997-ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் மரணமடைந்தார். 1962-ல் பத்மஸ்ரீ விருது, 1962-ல் பிலிப்பைன்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான `ராமோன் மக்ஸேஸே’ விருது, 1971-ல் போப் ஆண்டவரின் உலக சமாதானப் பரிசு, அமெரிக்காவின் `நல்ல சாமரித்தான்’ விருது, 1972-ல் சர்வதேச நேரு சமாதானப் பரிசு, 1976-ல் சாந்தி நிகேதனில் டாக்டர் பட்டம் இவை அன்னை பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்கவை.

இந்நிலையில், அவருக்கு புனிதர் பட்டம் அறிவிக்கப்பட்டு, வரும் 2016ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி வழங்கப்பட உள்ளதாக போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளதாக இத்தாலிய கத்தோலிக்க செய்தித்தாள் செய்தி வெளியிட்டு உள்ளது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img