பழிவாங்கி அரசியல் நடத்தவேண்டியதில்லை; தமிழிசை சவுந்தரராஜன்

 
 
பாரதீய ஜனதா கட்சிக்கு பழிவாங்கி அரசியல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கண்டித்து தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
பா.ஜ.க. மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜெய்சங்கர், மாநில வர்த்தக அணி செயலாளர் இல.ராஜேந்திரன், உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
 
 
கண்டன ஆர்ப்பாட்டத்திக்கு பின் மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
பா.ஜ.க. மற்ற கட்சிகளை விடவும் பலம் பொருந்திய கட்சி. சோனியா காந்தி, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை பழிவாங்கிதான் அரசியல் நடத்தவேண்டும் என்ற அவசியம் பா.ஜ.க.வுக்கு இல்லை. விளம்பரத்துக்காக நரேந்திர மோடியை தரக்குறைவாக எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன.
 
மோடி தமிழக மக்கள் மீது மிகுந்த அக்கறை வைத்துள்ளார். மக்கள் தலைவரை எந்தவொரு மக்கு தலைவர்களும் தரக்குறைவாக பேசுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது. காங்கிரஸ் சார்பில் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்துக்கும், மோடியை தரக்குறைவாக பேசியதற்கும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களின் பொருளாதார நிலையும், சிறு, குறு தொழில்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்து அவர்களுக்கு என்னென்ன உதவிகளை செய்யலாம் என்று மோடி உத்தரவின்பேரில் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் இன்று (19-12-2015)பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.
 
ஆம்பூரில் பா.ஜ.க. தொண்டர்களை ஆம் ஆத்மி போர்வையில் மர்ம ஆசாமிகள் சிலர் தாக்கியுள்ளனர். அவர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு ஒருதலைபட்சமாக காவல் துறையினர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறினார்
 
 
 
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories