பழிவாங்கி அரசியல் நடத்தவேண்டியதில்லை; தமிழிசை சவுந்தரராஜன்

 
 
பாரதீய ஜனதா கட்சிக்கு பழிவாங்கி அரசியல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கண்டித்து தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
பா.ஜ.க. மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜெய்சங்கர், மாநில வர்த்தக அணி செயலாளர் இல.ராஜேந்திரன், உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
 
 
கண்டன ஆர்ப்பாட்டத்திக்கு பின் மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
பா.ஜ.க. மற்ற கட்சிகளை விடவும் பலம் பொருந்திய கட்சி. சோனியா காந்தி, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை பழிவாங்கிதான் அரசியல் நடத்தவேண்டும் என்ற அவசியம் பா.ஜ.க.வுக்கு இல்லை. விளம்பரத்துக்காக நரேந்திர மோடியை தரக்குறைவாக எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன.
 
மோடி தமிழக மக்கள் மீது மிகுந்த அக்கறை வைத்துள்ளார். மக்கள் தலைவரை எந்தவொரு மக்கு தலைவர்களும் தரக்குறைவாக பேசுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது. காங்கிரஸ் சார்பில் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்துக்கும், மோடியை தரக்குறைவாக பேசியதற்கும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களின் பொருளாதார நிலையும், சிறு, குறு தொழில்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்து அவர்களுக்கு என்னென்ன உதவிகளை செய்யலாம் என்று மோடி உத்தரவின்பேரில் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் இன்று (19-12-2015)பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.
 
ஆம்பூரில் பா.ஜ.க. தொண்டர்களை ஆம் ஆத்மி போர்வையில் மர்ம ஆசாமிகள் சிலர் தாக்கியுள்ளனர். அவர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு ஒருதலைபட்சமாக காவல் துறையினர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறினார்
 
 
 
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories