சிபிஐ-யை பாஜக., துஷ்பிரயோகம் செய்து பழிவாங்குகிறது: கார்த்தி சிதம்பரம்

Published:

சென்னை:

சிபிஐ.,யை பாஜக., துஷ்பிரயோகம் செய்து, காங்கிரஸ் கட்சித் தலைவர்களை பழிவாங்குகிறது என்று காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பா.ஜனதா தலைமையிலான அரசு தேர்தலின்போது இந்திய மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு, எதிர்கட்சியினர் குறிப்பாக காங்கிரஸ் தலைவர்களை பழிவாங்கும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறை ஆகியவற்றை துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர்கள் குறிப்பாக சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மீது எடுக்கப்படும் இந்த பழிவாங்கும் செயல்களை காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்ல, இந்திய நாட்டு குடிமக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காழ்ப்புணர்ச்சியில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி பா.ஜ.க.வை சார்ந்த சில அரசியல் வியாபாரிகள் வழக்குகளை தொடர்ந்துள்ளது ஜனநாயக படுகொலையாகும்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

காங்கிரஸ் பேரியக்கமும், அதன் தலைவர்களும் இவ்வாறான பூச்சாண்டிகளுக்கு பயப்பட மாட்டார்கள். இளம் தலைவர் ராகுல்காந்தியின் பின்னால் லட்சோபலட்சம் தொண்டர்கள் எதையும் எதிர்கொள்ளும் உறுதியுடன் உள்ளனர். மோடி அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இத்தகைய இழிவான ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img