பீப் பாடல் சிம்பு, அனிருத் கோவை காவல் நிலையத்தில் ஆஜராக அவகாசம் கேட்டு கடிதம்

 

கோவை மாவட்டம் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இன்று ஆஜராகவில்லை.

ஆஜராக ஒரு மாதம் அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளனர். நடிகர் சிம்பு பாடிய ஆபாச பாடல் சமீபத்தில் வெப்சைட்டில் வெளியாகி, பெண்கள் மத்தியில் பெரும் கொத்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமுதாயத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கேவலமாக பாடப்பட்டிருப்பதாக கூறி இந்திய மாதர் சங்கத்தினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். இதன்படி கோவை மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ், கடந்த 12ம் தேதி நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தினர் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். சென்னை போலீசார் உதவியுடன், சிம்பு, அனிருத்தை பிடிக்க கோவை போலீசார் முயற்சி செய்தனர். அனிருத் கனடாவில் இருப்பதாக தெரியவந்தது. சிம்பு எங்கேயிருக்கிறார் என தெரியவில்லை. சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரிடம் போலீசார் இன்றைக்குள் கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் சிம்பு ஆஜராக சம்மன் கொடுத்தனர். அதேபோல் இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை ராகவேந்திராவிடமும் போலீசார் சம்மன் கொடுத்தனர்.

இதையடுத்து சிம்பு, அனிருத் ஆகியோர் கோவை ரேஸ்கோர்ஸ் நீதிமன்றத்தில் இன்று ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. சிம்பு, அனிருத் சார்பில் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் இன்று கடிதம் ஒன்று வழங்கப்பட்டது. சிம்புவின் சார்பில் அவரது தந்தை கடிதம் அனுப்பியதாக தெரிகிறது.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதில் சிம்பு தற்போது உள்ள நிலையில் காவல் நிலையத்தில் ஆஜராக முடியவில்லை. ஒரு மாதம் கால அவகாசம் வழங்கவேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதுபோல் அனிருத் தந்தை ராகவேந்திரா சார்பில் அளித்த கடிதத்தில் அனிருத் இந்த பாடலுக்கு இசை அமைக்கவில்லை. அனிருத்துக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. ஆனாலும் நேரில் ஆஜராக ஒரு மாத கால அவகாசம் வேண்டும்’ என்று கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சிம்பு, அனிருத் காவல் நிலையத்தில் ஆஜரானால் விசாரணைக்கு பிறகு கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருந்தனர். ஆஜரானால் போலீசார் கைது செய்து விடுவார்கள் என்ற தகவல் கிடைத்ததால்தான் சிம்பு ஆஜராகவில்லை என்று தெரிகிறது.

கோவை மாநகர போலீஸ் துணை ஆணையாளர் நிஷாபார்த்திபன் கூறுகையில், ‘‘ சிம்பு, அனிருத் தரப்பில் கொடுக்கப்பட்ட கடிதம் பெறப்பட்டது. அவர்களை உடனடியாக கைது செய்ய திட்டமில்லை. சம்மனுக்கு ஏன் ஆஜராகவில்லை, என்ன காரணம் என தெரியவில்லை. இது தொடர்பாக விசாரிக்கிறோம் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories