பீப் பாடல் சிம்பு, அனிருத் கோவை காவல் நிலையத்தில் ஆஜராக அவகாசம் கேட்டு கடிதம்

 

கோவை மாவட்டம் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இன்று ஆஜராகவில்லை.

ஆஜராக ஒரு மாதம் அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளனர். நடிகர் சிம்பு பாடிய ஆபாச பாடல் சமீபத்தில் வெப்சைட்டில் வெளியாகி, பெண்கள் மத்தியில் பெரும் கொத்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமுதாயத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கேவலமாக பாடப்பட்டிருப்பதாக கூறி இந்திய மாதர் சங்கத்தினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். இதன்படி கோவை மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ், கடந்த 12ம் தேதி நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தினர் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். சென்னை போலீசார் உதவியுடன், சிம்பு, அனிருத்தை பிடிக்க கோவை போலீசார் முயற்சி செய்தனர். அனிருத் கனடாவில் இருப்பதாக தெரியவந்தது. சிம்பு எங்கேயிருக்கிறார் என தெரியவில்லை. சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரிடம் போலீசார் இன்றைக்குள் கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் சிம்பு ஆஜராக சம்மன் கொடுத்தனர். அதேபோல் இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை ராகவேந்திராவிடமும் போலீசார் சம்மன் கொடுத்தனர்.

இதையடுத்து சிம்பு, அனிருத் ஆகியோர் கோவை ரேஸ்கோர்ஸ் நீதிமன்றத்தில் இன்று ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. சிம்பு, அனிருத் சார்பில் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் இன்று கடிதம் ஒன்று வழங்கப்பட்டது. சிம்புவின் சார்பில் அவரது தந்தை கடிதம் அனுப்பியதாக தெரிகிறது.

இதில் சிம்பு தற்போது உள்ள நிலையில் காவல் நிலையத்தில் ஆஜராக முடியவில்லை. ஒரு மாதம் கால அவகாசம் வழங்கவேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதுபோல் அனிருத் தந்தை ராகவேந்திரா சார்பில் அளித்த கடிதத்தில் அனிருத் இந்த பாடலுக்கு இசை அமைக்கவில்லை. அனிருத்துக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. ஆனாலும் நேரில் ஆஜராக ஒரு மாத கால அவகாசம் வேண்டும்’ என்று கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சிம்பு, அனிருத் காவல் நிலையத்தில் ஆஜரானால் விசாரணைக்கு பிறகு கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருந்தனர். ஆஜரானால் போலீசார் கைது செய்து விடுவார்கள் என்ற தகவல் கிடைத்ததால்தான் சிம்பு ஆஜராகவில்லை என்று தெரிகிறது.

கோவை மாநகர போலீஸ் துணை ஆணையாளர் நிஷாபார்த்திபன் கூறுகையில், ‘‘ சிம்பு, அனிருத் தரப்பில் கொடுக்கப்பட்ட கடிதம் பெறப்பட்டது. அவர்களை உடனடியாக கைது செய்ய திட்டமில்லை. சம்மனுக்கு ஏன் ஆஜராகவில்லை, என்ன காரணம் என தெரியவில்லை. இது தொடர்பாக விசாரிக்கிறோம் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories