55 பவுன், ரூ.3 லட்சம் கொள்ளை என வழக்கறிஞரின் மனைவி போலீஸிடம் பொய் புகார் கொடுத்து நாடகமாடியது அம்பலம் !

 
 
மதுரை அனுப்பானடி பாண்டியன் நகர் பனகல் தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது65) வழக்கறிஞர், இவர் மனைவி சந்திரகாந்தி, மாமியார் சுந்தரி ஆகியோருடன் வசித்து வருகிறார்.
 
வழக்கறிஞரின் மனைவி தெப்பக்குளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தெரிவித்ததாவது:-
 
நேற்று (17-12-2015) இரவு இவரது வீட்டுக்கு 4 பேர் கொண்ட கும்பல் மஞ்சள் பையுடன் அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என்று கூறி வந்தனர். இதை நம்பிய பெண்கள் கதவை திறந்து விட்டனர்.
 
வேகமாக வீட்டுக்குள் புகுந்த கும்பல் 3 பேரையும் கத்தியை காட்டி மிரட்டினார்கள். சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என்று கூறியவாறு வக்கீல் மற்றும் மனைவி, மாமியாரை வீட்டில் உள்ள ஒரு அறையில் தள்ளி பூட்டினார்கள்.
 
பின்னர் ‘மர்ம’ கும்பலை சேர்ந்தவர்கள் வீட்டில் மற்றொரு அறையில் இருந்த பீரோவில் இருந்து 55 பவுன் நகைகள், ரூ.3 லட்சத்து 12 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்று விட்டனர் என புகாரில் கூறி இருந்தார்.
 
புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர காவல் துணை ஆணையாளர் (குற்றம்) உமையாள்,, உதவி காவல் ஆணையாளர் ஜோஸ் தங்கையா, ஆய்வாளர் வேல்முருகன், மற்றும் தெப்பக்குளம் காவல் நிலையத்தினர் வழக்கறிஞர் வீட்டுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். துப்பறியும் மோப்பநாயும் விசாரணைக்கு பயன்படுத்தப்பட்டது. கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து காவல் துறையினர் புகார் அளித்த சந்திரகாந்தி உட்பட பலரிடம் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர்.
 
வழக்கறிஞர் மனைவி சந்திரகாந்தியின் அக்காவின் பையன் சரவணனிடம் மேற்கொண்ட நடத்திய புலன் விசாரணையில் சந்திரகாந்தி 55 பவுன் நகையை மதுரை புதூர் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் நகையை அடகு வைத்து விட்டு பொய் புகார் கொடுத்துள்ளதாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளாராம்.
 
சரவணன் கொடுத்த தகவலின் அடிப்படையில் சந்திரகாந்தியிடம் காவல் துறையினர் மீண்டும் விசாரணை மேற்கொண்டபோது 55 பவுன் நகையை அடகு வைத்தை அவரது கணவருக்கு தெரியாமல் மறைக்கவே நகை மற்றும் ரூ.3 லட்சம் கொள்ளை போனதாக பொய் புகார் கொடுத்து சந்திரகாந்தி நாடகமாடியது தெரிய வந்ததாம்.
 
மேலும் சந்திரகாந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் பதிவு செய்த முதலாவது புலனாய்வு அறிக்கையை ரத்து செய்து விட்டதாகவும் பரவலாக சொல்லப்படுகிறது.
 
காவல் துறையினரிடம் பொய்யான ஒரு புகாரை எவராவது அளித்தால் அவர் மீது பொய்யான புகாரை அளித்தமைக்காக சட்டத்தின் பிரகாரம் வழக்கு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது.
 
மதுரை மாநகர காவல் துறையினரிடம் 55 பவுன், ரூ.3 லட்சம் கொள்ளை போனதாக பொய் புகார் கொடுத்து நாடகமாடிய
சந்திரகாந்தி மீது பொய்யான புகாரை அளித்தமைக்காக வழக்கு பதிவு செய்யாமல் விடுவார்களா என்ன ?

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories