55 பவுன், ரூ.3 லட்சம் கொள்ளை என வழக்கறிஞரின் மனைவி போலீஸிடம் பொய் புகார் கொடுத்து நாடகமாடியது அம்பலம் !

 
 
மதுரை அனுப்பானடி பாண்டியன் நகர் பனகல் தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது65) வழக்கறிஞர், இவர் மனைவி சந்திரகாந்தி, மாமியார் சுந்தரி ஆகியோருடன் வசித்து வருகிறார்.
 
வழக்கறிஞரின் மனைவி தெப்பக்குளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தெரிவித்ததாவது:-
 
நேற்று (17-12-2015) இரவு இவரது வீட்டுக்கு 4 பேர் கொண்ட கும்பல் மஞ்சள் பையுடன் அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என்று கூறி வந்தனர். இதை நம்பிய பெண்கள் கதவை திறந்து விட்டனர்.
 
வேகமாக வீட்டுக்குள் புகுந்த கும்பல் 3 பேரையும் கத்தியை காட்டி மிரட்டினார்கள். சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என்று கூறியவாறு வக்கீல் மற்றும் மனைவி, மாமியாரை வீட்டில் உள்ள ஒரு அறையில் தள்ளி பூட்டினார்கள்.
 
பின்னர் ‘மர்ம’ கும்பலை சேர்ந்தவர்கள் வீட்டில் மற்றொரு அறையில் இருந்த பீரோவில் இருந்து 55 பவுன் நகைகள், ரூ.3 லட்சத்து 12 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்று விட்டனர் என புகாரில் கூறி இருந்தார்.
 
புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர காவல் துணை ஆணையாளர் (குற்றம்) உமையாள்,, உதவி காவல் ஆணையாளர் ஜோஸ் தங்கையா, ஆய்வாளர் வேல்முருகன், மற்றும் தெப்பக்குளம் காவல் நிலையத்தினர் வழக்கறிஞர் வீட்டுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். துப்பறியும் மோப்பநாயும் விசாரணைக்கு பயன்படுத்தப்பட்டது. கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து காவல் துறையினர் புகார் அளித்த சந்திரகாந்தி உட்பட பலரிடம் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர்.
 
வழக்கறிஞர் மனைவி சந்திரகாந்தியின் அக்காவின் பையன் சரவணனிடம் மேற்கொண்ட நடத்திய புலன் விசாரணையில் சந்திரகாந்தி 55 பவுன் நகையை மதுரை புதூர் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் நகையை அடகு வைத்து விட்டு பொய் புகார் கொடுத்துள்ளதாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளாராம்.
 
சரவணன் கொடுத்த தகவலின் அடிப்படையில் சந்திரகாந்தியிடம் காவல் துறையினர் மீண்டும் விசாரணை மேற்கொண்டபோது 55 பவுன் நகையை அடகு வைத்தை அவரது கணவருக்கு தெரியாமல் மறைக்கவே நகை மற்றும் ரூ.3 லட்சம் கொள்ளை போனதாக பொய் புகார் கொடுத்து சந்திரகாந்தி நாடகமாடியது தெரிய வந்ததாம்.
 
மேலும் சந்திரகாந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் பதிவு செய்த முதலாவது புலனாய்வு அறிக்கையை ரத்து செய்து விட்டதாகவும் பரவலாக சொல்லப்படுகிறது.
 
காவல் துறையினரிடம் பொய்யான ஒரு புகாரை எவராவது அளித்தால் அவர் மீது பொய்யான புகாரை அளித்தமைக்காக சட்டத்தின் பிரகாரம் வழக்கு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது.
 
மதுரை மாநகர காவல் துறையினரிடம் 55 பவுன், ரூ.3 லட்சம் கொள்ளை போனதாக பொய் புகார் கொடுத்து நாடகமாடிய
சந்திரகாந்தி மீது பொய்யான புகாரை அளித்தமைக்காக வழக்கு பதிவு செய்யாமல் விடுவார்களா என்ன ?

 

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories