கருவூலத்தை சூறையாடிய கஜா… புதுக்கோட்டையில் இதுவரை கண்டிராத சேதம்!

pudukottai treasury - 2026

தமிழகத்தைத் தாக்கிய கஜா புயல், பல்வேறு இடங்களில் மரங்களை வேரோடு சாய்த்தும், மின் கம்பங்களை சரித்தும் கோர தாண்டவம் ஆடியுள்ளது. கட்டடங்கள் பல சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக, கூரை வீடுகள்,ஓட்டு வீடுகள் சூறைக் காற்றில் பறந்துள்ளன.

புதுக்கோட்டை அரசுக் கருவூல அலுவலகத்தின் நிலை மிக பரிதாபமாக உள்ளது. மேற்கூரை கஜா புயல் சூறைக் காற்றின் வேகத்தில் பெயர்ந்து பறந்துள்ளன. ஓடுகள் பல காற்றின் வேகத்தில் தாங்காமல் உள்ளே விழுந்து நொறுங்கியுள்ளன. மழையும் வேறு பெய்ததால், கருவூலத்தினுள் வைக்கப்பட்டிருந்த கோப்புகள் பல சேதம் அடைந்துள்ளன.

புதுக்கோட்டை மச்சுவாடி தஞ்சை சாலை சர்ச் எதிரில் மின் கம்பங்கள் சாய்ந்தன. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பொதுப்பணித் துறை குடியிருப்பு பின்புறம் உள்ள புளியமரம் மாமரம் வேருடன் சாய்ந்தன. இதனால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.

pudukottai treasur2 - 2026

குன்றாண்டார் கோயில் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன், லேசான மழை பெய்தது. இதனால், மரக்கிளைகள் பல இடங்களில் முறிந்து விழுந்து கிடந்தன.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் கஜாவின் கோர தாண்டவத்தால் இரவில் வீட்டிற்குள்ளேயே பொதுமக்கள் முடங்கி கிடந்தனர்.. சுழன்று வீசும் சூறாவளிக் காற்றால் தகர மேற்கூரைகள் பறந்தன.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
pudukkottai machuvadi - 2026

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான ஜெகதாப்பட்டினம் கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தன. மேலும் அலகுகள் சூறைக்காற்றால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. மீனவர்கள் இதனால் பெருத்த சோகம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சூறைக்காற்றால் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப் பட்டது.

புதுக்கோட்டை தஞ்சை சாலையில், கந்தர்வக்கோட்டையில் பலத்த சூறைக் காற்று வீசியது. இதனால் மரங்கள் சரிந்து விழுந்து போக்குவரத்து துண்டிக்கப் பட்டது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வைத்த விளம்பரத் தட்டிகள் எல்லாம் நடு ரோட்டில் பறந்து விழுந்தன. இதனால் கார் பேருந்து ஒட்டுநர்கள் தடுமாற்றம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் சூறைக் காற்று காரணமாக பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப் பட்டது. அறாந்தாங்கி அக்னி பஜார் அருகில் (சத்திய மூர்த்தி பள்ளி )
மின் கம்பம் மரத்துடன் சரிந்து விழுந்து, சாலை துண்டிக்கப் பட்டது.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

இதனிடையே, புதுக்கோட்டை புயல் பாதிப்பு குறித்த தகவல்களை பகிர்ந்து உதவி கோர 04322 222207 ☎ 1077 ? WhatsApp 9500589533 ஆகிய எண்களையும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் பேச 04322 221658 எண்ணையும் அழைக்குமாறு தகவல் வெளியிடப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories