December 5, 2025, 7:08 PM
26.7 C
Chennai

கருவூலத்தை சூறையாடிய கஜா… புதுக்கோட்டையில் இதுவரை கண்டிராத சேதம்!

pudukottai treasury - 2025

தமிழகத்தைத் தாக்கிய கஜா புயல், பல்வேறு இடங்களில் மரங்களை வேரோடு சாய்த்தும், மின் கம்பங்களை சரித்தும் கோர தாண்டவம் ஆடியுள்ளது. கட்டடங்கள் பல சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக, கூரை வீடுகள்,ஓட்டு வீடுகள் சூறைக் காற்றில் பறந்துள்ளன.

புதுக்கோட்டை அரசுக் கருவூல அலுவலகத்தின் நிலை மிக பரிதாபமாக உள்ளது. மேற்கூரை கஜா புயல் சூறைக் காற்றின் வேகத்தில் பெயர்ந்து பறந்துள்ளன. ஓடுகள் பல காற்றின் வேகத்தில் தாங்காமல் உள்ளே விழுந்து நொறுங்கியுள்ளன. மழையும் வேறு பெய்ததால், கருவூலத்தினுள் வைக்கப்பட்டிருந்த கோப்புகள் பல சேதம் அடைந்துள்ளன.

புதுக்கோட்டை மச்சுவாடி தஞ்சை சாலை சர்ச் எதிரில் மின் கம்பங்கள் சாய்ந்தன. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பொதுப்பணித் துறை குடியிருப்பு பின்புறம் உள்ள புளியமரம் மாமரம் வேருடன் சாய்ந்தன. இதனால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.

pudukottai treasur2 - 2025

குன்றாண்டார் கோயில் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன், லேசான மழை பெய்தது. இதனால், மரக்கிளைகள் பல இடங்களில் முறிந்து விழுந்து கிடந்தன.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் கஜாவின் கோர தாண்டவத்தால் இரவில் வீட்டிற்குள்ளேயே பொதுமக்கள் முடங்கி கிடந்தனர்.. சுழன்று வீசும் சூறாவளிக் காற்றால் தகர மேற்கூரைகள் பறந்தன.

pudukkottai machuvadi - 2025

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான ஜெகதாப்பட்டினம் கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தன. மேலும் அலகுகள் சூறைக்காற்றால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. மீனவர்கள் இதனால் பெருத்த சோகம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சூறைக்காற்றால் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப் பட்டது.

புதுக்கோட்டை தஞ்சை சாலையில், கந்தர்வக்கோட்டையில் பலத்த சூறைக் காற்று வீசியது. இதனால் மரங்கள் சரிந்து விழுந்து போக்குவரத்து துண்டிக்கப் பட்டது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வைத்த விளம்பரத் தட்டிகள் எல்லாம் நடு ரோட்டில் பறந்து விழுந்தன. இதனால் கார் பேருந்து ஒட்டுநர்கள் தடுமாற்றம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் சூறைக் காற்று காரணமாக பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப் பட்டது. அறாந்தாங்கி அக்னி பஜார் அருகில் (சத்திய மூர்த்தி பள்ளி )
மின் கம்பம் மரத்துடன் சரிந்து விழுந்து, சாலை துண்டிக்கப் பட்டது.

இதனிடையே, புதுக்கோட்டை புயல் பாதிப்பு குறித்த தகவல்களை பகிர்ந்து உதவி கோர 04322 222207 ☎ 1077 ? WhatsApp 9500589533 ஆகிய எண்களையும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் பேச 04322 221658 எண்ணையும் அழைக்குமாறு தகவல் வெளியிடப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories