பேரிடர் காலங்களில் கேரளாவைப் போல் தமிழகத்தில் எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி!

edappadi pazanisamy - 2026

பேரிடர் காலங்களில் கேரளாவைப் போல் தமிழகத்தில் எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் வழங்கினார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட்டு திருச்சி சென்றனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் செல்ல ராசாமணி வரவேற்றார்.

திருச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பு குறித்து, ஆட்சியர் செல்ல ராசாமணியிடம் கேட்டறிந்த அவர்கள் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை புறப்பட்டுச் சென்றனர். புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து காரில் சென்ற அவர்கள், மாப்பிள்ளையார்குளம் பகுதியில் ஆய்வு செய்து, அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கி வருகிறது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்பு குறைந்துள்ளது. புதுக்கோட்டை நகரத்தில் நாளை மாலைக்குள் மின் இணைப்பு வழங்கப்படும் என்று -தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வரும் முதல்வர் பழனிச்சாமியின் வாகனத்தை மறித்து திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர் கூடூர் பகுதி மக்கள்.

கூடூரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் துறையினர் மற்றும் கோட்டாட்சியருடனும் அதிகாரிகளுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories