December 5, 2025, 8:39 PM
26.7 C
Chennai

பேரிடர் காலங்களில் கேரளாவைப் போல் தமிழகத்தில் எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி!

edappadi pazanisamy - 2025

பேரிடர் காலங்களில் கேரளாவைப் போல் தமிழகத்தில் எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் வழங்கினார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட்டு திருச்சி சென்றனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் செல்ல ராசாமணி வரவேற்றார்.

திருச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பு குறித்து, ஆட்சியர் செல்ல ராசாமணியிடம் கேட்டறிந்த அவர்கள் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை புறப்பட்டுச் சென்றனர். புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து காரில் சென்ற அவர்கள், மாப்பிள்ளையார்குளம் பகுதியில் ஆய்வு செய்து, அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கி வருகிறது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்பு குறைந்துள்ளது. புதுக்கோட்டை நகரத்தில் நாளை மாலைக்குள் மின் இணைப்பு வழங்கப்படும் என்று -தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வரும் முதல்வர் பழனிச்சாமியின் வாகனத்தை மறித்து திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர் கூடூர் பகுதி மக்கள்.

கூடூரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் துறையினர் மற்றும் கோட்டாட்சியருடனும் அதிகாரிகளுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories