வீதிகளில் முத்தமிடும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி தாக்குதல் : 6 பெண்கள் உள்ளிட்ட 31பேர் கைது

Published:

 
கிஸ் ஆப் லவ் அமைப்பினர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வீதிகளில் முத்தமிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த அனுமன் சேனா அமைப்பினர் முத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கடுமையாக தாக்கினர். இரு அமைப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டதால் அந்த இடம் போர்க்களம் போல் காட்சி அளித்தது.
நடைபெற்ற தாக்குதல் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தடியடி நடத்தி மோதலில் ஈடுபட்ட இருபிரிவினரையும் விரட்டி அடித்தனர். மேலும் மோதலில் ஈடுபட்ட கிஸ் ஆப் லவ் அமைப்பின் 6 பெண்கள் உள்ளிட்ட 15 பேரையும், அனுமன் சேனா அமைப்பின் 16 பேரையும் கைது செய்துள்ளனர்

Related articles

Recent articles

spot_img