ஆப்கனில் 5.8 அளவில் நிலநடுக்கம்: வட இந்தியாவிலும் நில அதிர்வு

Published:

புது தில்லி:

ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் ரிக்டர் அளவுகோலில் 5.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியாவின் வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.

ஆப்கானிஸ்தானின் இன்று மதியம் 2.07 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்துகுஷ் மலைப் பகுதியில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது. இது ரிக்டர் அளவு கோலில் 5.8 ஆகப் பதிவாகியிருந்தது. இத்தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதுமில்லை.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img