வீரமங்கை வேலுநாச்சியார் சிலைக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சியின் தலைவர்கள் மாலையணிவிப்பு

Published:

 
சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் அருகே சூரக்குளத்தில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாள் விழாவையொட்டி அவரது நினைவு மண்டபத்தில் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் நேற்று (03-01-2016) மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ்.கோகுலஇந்திரா, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி உள்ளிட்ட ல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் வேலுநாச்சியார் சிலைக்கு மாலையணிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிவகங்கை, காரைக்குடி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
 

Related articles

Recent articles

spot_img