இந்தியாவில் நிலநடுக்கம் : ஒருவர் பலி : 8 பேர் காயம்

Published:

 
இந்தியா-மியான்மர் எல்லையருகே மணிப்பூரை மையமாகக் கொண்டு இன்று அதிகாலை 4.35 மணிக்கு கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இதில் ஒருவர் பலியானார். 8 பேர் காயமடைந்தனர்.
நிலநடுக்கத்தையடுத்து இம்பால் நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது.அசாம், பீகார், அருணாசல பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவாகியுள்ள இந்நிலநடுக்கம், இம்பால் நகருக்கு மேற்கு-வடக்கே 33கி.மீ., தொலைவில் மையம் கொண்டதாக இந்திய வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அசாம் முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, நிலநடுக்க நிலவரம் குறித்து வீசாரித்தார். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விவரங்களை கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img