பச்சை குத்திய தொண்டன் போகவில்லை… பச்சோந்தி தான் போயிருக்கிறது!

Published:

Sellur Raju - 2026

மதுரை : மதுரை 90வது வார்டு ஜெய்ந்திபுரம் . ஜீவாநகர் . புலிப்பாண்டியன் தெரு , ஆகிய பகுதிகளில் ரூ 75. லட்சம் மதிப்பீட்டில் . ஆழ்குழாய் கிணறு, ே பவர் பிளாக் சாலை. சின்டெக்ஸ். சத்துணவுகூடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

விழாவிற்கு முன்னதாக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி. அளித்தார்.

அப்போது அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழத்தில் இருந்த செந்தில் பாலாஜி அ.தி.மு.கவில் இருந்தவர் தான். அவர் தியாகி இல்லை. அவர் தி.மு.கவில் சேர்ந்ததால் அ.தி.மு.க கவலைப் படவில்லை

எந்த ஒரு பச்சை குத்திய தொண்டனும் திமுகவுக்கு போகவில்லை… பணம் கொடுத்து தான் போயிருப்பார்கள்

இவர் போனதால் தொண்டர்கள் மத்தியில் கட்சியை வேகமாக வளர்க்க வேண்டும் என்று தோன்றியுள்ளது

18 எம்எல் ஏக்களில் இவரும் ஒருவர். தி.மு.கவில் சாதாரண கவுன்சிலராக இருந்தவர் அம்மாவின் தயவால் அமைச்சரானவர் இவர் தி.மு.கவில் சேர்ந்ததால் கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. வளர்ச்சி பெறும்… என்றார்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img