மூட்டை பூச்சிக்கு பயந்து வீடுகளை கொளுத்திய வாலிபருக்கு தீவிர சிகிச்சை!

Published:

 
அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் ஜோகனான் லர்சோனா (40) என்பவர் தங்கியிருந்த அவரது வீட்டில் மூட்டை பூச்சி தொல்லை அதிகம் இருந்ததை கொன்று ஒழிக்க முடிவு அவர் செய்தார்.
 
அதற்காக அமெரிக்காவில் உள்ள மிசிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகரில் உள்ள அவரது வீடு முழுவதும் ஆல்கஹாலை அடித்தார். அந்த நிலையில் அவரது கண்ணில் ஒரு மூட்டை பூச்சி தென்பட்டது. அதனை கொல்ல சிகரெட் லைட்டரை பற்ற வைத்து அதன் மீது வைத்து பொசுக்கினார்.அப்போது லைட்டரில் இருந்து வெளியான தீ வீடு முழுவதும் பிடித்து பின்னர் பக்கத்து வீடுகளுக்கும் பரவி 4 வீடுகளில் தீ பிடித்து பொருட்கள் சேதமடைந்தன.
 
நடைபெற்ற தீ விபத்தில் மூட்டை மூட்டை பூச்சிக்கு பயந்து அதை கொல்ல வீட்டை கொளுத்திய லர்சோனா உடல் முழுவதும் தீயில் கருகியது. அவர் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
அமெரிக்காவில் மூட்டை பூச்சி தொல்லை அதிகம் உள்ள நகரமாக பெரிய நகரங்களில் ஒன்றாக டெட்ராய்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. பிலா டெல்பியா 5–வது இடத்தில் உள்ளது குறிப்பிடதக்கத்து
ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Related articles

Recent articles

spot_img