சென்னை:
தமிழக மக்களுக்கு “இதயம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள்” என பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பிரதமர் தமது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், தமிழ் நாட்டு மக்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள் என தமிழில் ட்வீட் செய்துள்ளார். இதேபோல் மகரசங்கராந்தி, அஸ்ஸாமின் மகா பிகு கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
My heartiest Pongal greetings to people of Tamil Nadu. தமிழ் நாட்டு மக்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்
— Narendra Modi (@narendramodi) January 14, 2016