அவசரச் சட்டம் கொண்டுவந்தால் நிரந்தரத் தடை வந்துவிடும்: தமிழிசை

Published:

திருவள்ளூர்:
மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தால் ஜல்லிக்கட்டுக்கான தடை நிரந்தரமாக வந்துவிடும் என்று கூறினார் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
காங்கிரஸுக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, தூண்டிவிடுபவரும் அவர்தான் என்று கூறினார்.
மேலும், ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், நிரந்தர தடை வந்துவிடும் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  ஜல்லிக்கட்டு தடையை நீக்க அடுத்த ஆண்டு பா.ஜ.க, முயற்சி மேற்கொள்ளும். ஜல்லிக்கட்டு நடத்த மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வர பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறினார்.

Related articles

Recent articles

spot_img