மோடியை களங்கப்படுத்த நினைப்பவர்கள் கலங்கிப்போய்… அரசியலில் காலமாவார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் சாபம்!

Published:

pon radhakrishnan - 2026

பிரதமர் மோடிக்கு எதிராக பேசுபவர்கள் அரசியலில் காணாமல் போவார்கள் என்று, மதுரை பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது… 10 ஆண்டுகளில் பெரிய மருத்துவ மாநகரமாக மதுரை மாறும்; தமிழகத்தில் மீண்டும் மிகப்பெரிய கூட்டணியை அமைப்போம்; நாற்பதும் நமதே என்பதுதான் நமது இலக்கு என்று உறுதிபடக் கூறினார்.

தெய்வப் பிறவியா எனக் கூறும் அளவுக்கு மக்களுக்காக நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடியை களங்கப்படுத்த நினைப்பவர்கள் கலங்கிப்போய் அரசியலில் காலமாவார்கள் என்று சாபம் இட்டார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

முன்னதாக, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், வரும் நாடாளுமன்ற தேர்தலில் சம உணர்வோடு வரும் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என்றும், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தால் நாட்டிற்கு பல முதலீடுகள் வந்துள்ளன என்றும் கூறினார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img