தமிழகத்தில் வேலைவாய்ப்பு இருந்தால் வெளியே சென்றிருப்பார்களா? விஜயகாந்த் வேதனை

தமிழகத்தில் இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. அதனால்தான் அவர்கள் ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்கிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். ஆந்திர மாநில துப்பாக்கிச் சூட்டில் அரூரை அடுத்த அரசநத்தம், கருக்கம்பட்டி, ஆலமரத்துவளவு கிராமங்களைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும், நிதியுதவி வழங்கவும் விஜயகாந்த் வியாழக்கிழமை இரவு அரூருக்குச் சென்றார். அரூரில் உள்ள வனத் துறைக்குச் சொந்தமான பயணியர் விடுதிக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய விஜயகாந்த் அந்த 7 குடும்பத்தினருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3.50 லட்சம் நிதியுதவியை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வனப் பகுதியில் நுழையும் ஒன்றும் அறியாத ஆடு, மாடுகளைக் கொல்வதற்கும்கூட தடை உத்தரவு உள்ளது. ஆனால், அப்பாவி தமிழகத் தொழிலாளர்கள் 20 பேரை இரக்கமின்றி ஆந்திர போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனைக் கண்டித்து தமிழர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து சுமார் 80 லட்சம் பேர் வேலைக்காகக் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் தொழில் வாய்ப்புகள் இருந்தால் ஆந்திர மாநிலத்துக்கு மரம் வெட்டும் வேலைக்குத் தொழிலாளர்கள் சென்றிருக்க மாட்டார்கள்…. என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories