தமிழகத்தில் இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. அதனால்தான் அவர்கள் ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்கிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். ஆந்திர மாநில துப்பாக்கிச் சூட்டில் அரூரை அடுத்த அரசநத்தம், கருக்கம்பட்டி, ஆலமரத்துவளவு கிராமங்களைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும், நிதியுதவி வழங்கவும் விஜயகாந்த் வியாழக்கிழமை இரவு அரூருக்குச் சென்றார். அரூரில் உள்ள வனத் துறைக்குச் சொந்தமான பயணியர் விடுதிக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய விஜயகாந்த் அந்த 7 குடும்பத்தினருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3.50 லட்சம் நிதியுதவியை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வனப் பகுதியில் நுழையும் ஒன்றும் அறியாத ஆடு, மாடுகளைக் கொல்வதற்கும்கூட தடை உத்தரவு உள்ளது. ஆனால், அப்பாவி தமிழகத் தொழிலாளர்கள் 20 பேரை இரக்கமின்றி ஆந்திர போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனைக் கண்டித்து தமிழர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து சுமார் 80 லட்சம் பேர் வேலைக்காகக் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் தொழில் வாய்ப்புகள் இருந்தால் ஆந்திர மாநிலத்துக்கு மரம் வெட்டும் வேலைக்குத் தொழிலாளர்கள் சென்றிருக்க மாட்டார்கள்…. என்றார்.
Hot this week
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.
உரத்த சிந்தனை
கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!
முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...
அரசியல்
அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

