மகாராஷ்டிராவில் சோகம்: 13 மாணவர்கள் கடலில் மூழ்கி பலி

Published:

மும்பைக்கு தெற்கே சுமார் 140 கிமீ தொலைவில் முருத் கடற்கரை உள்ளது. இது கொன்கன் கடற்கரைப்பகுதியில் உள்ளது இங்கு சுமார் 12 கடற்கரைகள் உள்ளன. கோவாவுக்குப் பதிலாக இந்த இடத்திற்கு சுற்றுலாப்பயணிகள் அதிகமாக வருவது வழக்கம். இந்த பகுதிக்கு புனேயில் உள்ள அபேதா இனாம்தார் கலைக்கல்லூரியைச் சேர்ந்த 155 மாணவர்கள் சுற்றுலா சென்றுள்ளனர். இதில் கடலில் குளிக்க சென்ற 13 பேர் கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் 19 முதல் 23 வயதுடையவர்கள் என்றும் இதில் 3 பெண்கள் அடங்குவர் என்றும் தெரிய வந்துள்ளது.

Related articles

Recent articles

spot_img