புதுச்சேரியில் தேசிய சப் ஜுனியர் கூடைபந்து போட்டி போட்டிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று மாலை துவக்கி வைக்க உள்ளார். இந்த போட்டிகளில் அரியான அணியில் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தியின் மகளான பிரியங்காவின் மகள் பங்கேற்கிறார். இதற்காக பிரியங்கா தனது மகன் ரேகன் வதேரா, மகள் மெய்ரா வதேரா ஆகியோருடன் நேற்று புதுச்சேரி வந்தார். டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர்கள் கார் மூலம் புதுச்சேரிக்கு வந்தனர். இங்கு பழைய கோர்ட்டு வளாகம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் அவர்கள் தங்கியுள்ளனர்.
பிரியங்காவின் வருகை குறித்து புதுவை காங்கிரஸ் தலைவர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. தனிப்பட்ட முறையில் பிரியங்கா வந்துள்ளதால் அவரை சந்திக்க காங்கிரசாருக்கும் அனுமதியில்லை என்று கூறப்படுகிறது.
.
புதுச்சேரியில் தேசிய சப் ஜுனியர் கூடைபந்து போட்டி பயிற்சியில் ஈடுபட்ட பிரியாங்கா மகள் மிராயா
Popular Categories


