மார்த்தாண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சொந்தமான பஸ் டயர் தீப்பிடித்து எரிந்தது. இதனால் பயணிகள் கூச்சல் போட்டனர். உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தியதும் பயணிகள் இறங்கி ஓடினர். டிரைவர் சென்று பார்த்தபோது அதிக உராய்வினால் ஏற்பட்ட வெப்பம் காரணமாக டயர் தீ பிடித்து எரிந்தது தெரிய வந்தது.

