சரிதா நாயருடன் தொடர்பு வைத்திருந்த பிரமுகர்கள் யார்? யார்? நாளை தெரியும்

Published:

கேரளாவில் கடந்த 2011–ம் ஆண்டு நடந்த சோலார் பேனல் மோசடி விவகாரம் இப்போதும் புயலை கிளப்பி வருகிறது.

இந்த மோசடி தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. மோசடிக்கு சூத்திர தாரியாக கூறப்படும் பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி பல்வேறு திடுக்கிடும் தகவல் களை தெரிவித்து வருகிறார்.

பல அரசியல் பிரமுகர்கள் எனக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்தனர். அதற்காக அவர்களின் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினர். அவர்களின் பேச்சை நம்பி பலரிடம் நான், ஏமாந்தேன். அவர்களை பற்றிய அனைத்து விவரங்களும் எனக்கு தெரியும். யார்– யார்? என்னை பயன்படுத்திக் கொண்டனர் என்பதை நன்கு அறிவேன். அவர்களை பற்றிய விவரங்களை பலரும் கூடி இருக்கும் இந்த கோர்ட்டில் கூறுவதற்கு தயக்கமாக உள்ளது. ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டால் அந்த தகவல்களை கூற தயாராக இருக்கிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

இந்நிலையில், தொடர்பு வைத்திருந்த பிரமுகர்கள் குறித்த தகவல்கலை மூடி முத்திரையிட்ட கவரில் நாளை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால் சரிதாநாயருடன் தொடர்பில் இருந்த அரசியல் பிரமுகர்கள் பலரும் கலக்கம் அடைந்துள்ளனர். பட்டியலில் யார்–யார்? இடம் பெற போகிறது என்ற எதிர்பார்ப்பு கேரளாவில் பரபரப்பை எகிற வைத்துள்ளது.

Related articles

Recent articles

spot_img