February 24, 2026, 2:23 AM
25.9 C
Chennai

சாதிய அடையாளக் கயிறா? கல்வித்துறை சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது! திரும்ப பெற வேண்டும்!

ramagopalan - 2026

தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது என்றும் அதை திரும்பப் பெற வேண்டும் என்றும் இந்து முன்னணி நிறுவுனர் ராமகோபாலன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. அந்த சுற்றறிக்கையில்(RC No.30311/M/S1/2019, dt. 31.7.2019), சாதிய அடையாளமாக அணிந்து வரும் கயிறு, காப்பு சாதிய அடையாளமாக இருக்கிறது.

இதனை ஐ.ஏ.எஸ். பயிற்சியாளர்கள் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பார்த்ததாக கூறப்பட்டதாக தெரிவிக்கிறது.

மேலும், விளையாட்டுத் துறையில் வைக்கப்படும் நெற்றி திலகம், கைகளில், தலையில் அணியும் ரிப்பன் போன்றவற்றில் மஞ்சள், பச்சை, ஆரஞ்சு முதலாவை மீது நடவடிக்கை எடுக்கக் குறிப்பிடுகிறது.

உண்மையில் அவ்வாறு இருக்கும் இடங்களில் நல்லிணக்கத்தோடு அதனை கையாள கல்வி அதிகாரிகள் மூலம் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துவதை வரவேற்கிறோம். ஆனால், பள்ளி திறந்து நடந்து வரும் வேளையில் இப்போது இதனை வெளியிட்டிருப்பதன் மூலம் சில சந்தேகங்கள் எழுகின்றன.

1. ஆடி மாதம் காப்புக் கட்டி விரதம் இருக்கும் மாதமாகும். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்த வழக்கம் இருக்கிறது. இதனை தடுத்து, அடுத்த தலைமுறை, இந்து சமய பக்தியில் இணைந்துவிடக்கூடாது என்பதற்காகவா?

2. வருகின்ற ஆகஸ்ட் 15 முதல் சகோதரத்துவத்தை கொண்டாடும் வகையில் கட்டப்படும் ராக்கி எனும் ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை தடுக்கும் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டதா இந்த சுற்றறிக்கை..?

3. பள்ளிகளில் கிறிஸ்தவ மாணவ, மாணவிகள் சிலுவை அணிந்தும், முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப், மாணவர்கள் குல்லாய் அணிந்து வருகிறார்கள். இது போன்றவை, மாணவர்களிடம் வேறுபாடு இல்லாமல் இருக்க செய்யப்படும் சீருடைக்கு எதிரானது இல்லையா? இது மதத்தின் அடையாளமாக வில்லையா? இதற்கு கல்வித்துறையின் பதில் என்ன?

4. சில அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் கையில் கட்டியிருக்கும் சாமி கயிறு எனப்படும், காசி, திருப்பதி கயிறுகளை பள்ளி தலைமையாசிரியர் அவர்களே வலுக்கட்டாயமாக வெட்டியிருக்கிறார்கள். இது, மாணவர்களிடம் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

5. பள்ளி மாணவர்கள் பொது வீதியில் அடித்துக்கொள்கிறார்கள். இதற்கு சாதியோ, மதமோ காரணமாக இருப்பதில்லை. அவர்களின் வெறுப்புணர்வு, நம்பிக்கையின்மையும், ஈகோவும் காரணமாக அமைகின்றன. அதனைத் தடுக்க அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்?

6. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, பான்பாராக் போன்ற பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. அது மட்டுமல்ல, பல அரசு பள்ளி மாணவர்கள் மதுவிற்கு அடிமையாகியும் வருகிறார்கள். இதற்கு என்ன தீர்வை அரசு அதிகாரிகள் கண்டுள்ளனர்?!

7. பள்ளிகளில் மதத்தை திணிக்கும் உள்நோக்கோடு இலவசமாக பைபிள் கொடுக்கப்படுவதை இந்து முன்னணி தடுத்து பிடித்துக்கொடுத்துள்ளது. அதிகாரிகள், எங்களது புகார் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்?

9. தமிழக அரசு நடத்தும் கல்லூரி, பள்ளி விடுதிகளில் மாணவர்கள் அல்லாத பல நூறு பேர், மாணவர்கள் போர்வையில் தங்கியுள்ளதாகவும், அவர்கள் நகர்புற நக்சல்கள் என்பதாகவும், அவர்கள் மாணவர்களிடையே மூளை சலவை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பட்டியலை சரிபார்த்து, முறைகேடாக தங்கியுள்ளவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10. நமது பாரம்பரியமான நெற்றியில் திலகமிட்டு வரவேற்பதை தடுக்கும் பொருட்டு, அதனை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வைக்கும் இந்த சுற்றறிக்கை ஆபத்தானது என எச்சரிக்கிறோம்.

எனவே, மாணவர்களிடையே ஒற்றுமை, ஒருமைப்பாடு, சமதர்ம பார்வையை ஆசிரியர்கள் ஏற்படுத்த வலியுறுத்தவும். ஒழுக்கம், கட்டுப்பாடு, பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்த ஆசிரியர்கள், பெற்றோர், தன்னார்வு தொண்டு நிறுவனங்களை இணைத்து கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தி நல்லதொரு மாற்றத்தை கல்வித்துறையில் ஏற்படுத்திட கேட்டுக் கொள்கிறோம்.

இதுபோன்ற சுற்றறிக்கை மதமாற்றும் வேலையை கல்வித்துறையில் செய்து வரும் மதத் தரகர்கள் பயன்படுத்தி, மத வெறுப்பை ஏற்படுத்துவார்கள் என்பதை தங்களின் கவனத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, இந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

school circular - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Entertainment News

Popular Categories