February 24, 2026, 3:59 AM
25.9 C
Chennai

இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் இவர் இல்லாமல் போன காரணம் ?

vadivelu - 2026இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான 24 ஆம் புலிகேசி படத்தை இயக்குநர் சிம்புதேவன் தொடங்கினார்.இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் ஷங்கர் தயாரித்தார்.

வடிவேலு நாயகனாக அறிமுகமான முதல் படம் இம்சை அரசன், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.vadivelu 1 - 2026படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் திடீரென அப்படியே நின்றுபோனது. வடிவேலு மற்றும் படக்குழுவினர் இடையே மோதல் காரணமாக படப்பிடிப்பு அப்படியே நின்றுபோனது என்று சொல்லப்பட்டது.

மிகப் பெரிய பொருட்செலவில் அரங்குகள் அமைத்தும், படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என இயக்குநர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் நடிகர் வடிவேலுவிடம் இயக்குநர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் விளக்கம் கேட்டுள்ளது.vadivelu 3 - 2026வடிவேலு அந்தப்படத்தில் நடிக்கவில்லையெனில் கடும் நடவடிக்கை இருக்கும் என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அண்மையில் வடிவேலு அளித்த பேட்டியொன்றில் இயக்குநர் ஷங்கரைக் கடுமையாகத் திட்டி இருந்தார்.

இந்நிலையில் இவர்களுக்குள் மோதல் வந்ததற்கான காரணம் என்னவென்பது இப்போது கசிந்திருக்கிறது.

இயக்குநர் சிம்புதேவன் வடிவேலுவை பின்னணி பாட வைத்து ஒரு பாடலை உருவாக்கினாராம். வடிவேலும் மிகவும் ரசித்து அந்தப்பாடலைப் பாடியிருந்தாராம்.

பாடல் பதிவு முடிந்து சில நாட்கள் கழித்து அதன் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.vadivelu 2 - 2026அந்தப்பாடல் காட்சியில் நடிக்க வடிவேலு தயாராகி கேமிரா முன்னால் நின்ற நேரத்தில் அந்தப் பாடல் ஒலித்திருக்கிறது. அதைக் கேட்ட வடிவேலுவுக்கு அதிர்ச்சி.

காரணம், அந்தப் பாடலை வேறொருவர் பாடியிருந்தாராம்.

உடனே சிம்புதேவனைக் கூப்பிட்டுக் கேட்டிருக்கிறார் வடிவேலு. அதற்கு, சிம்புதேவன், நான் விருப்பப்பட்டுத்தான் உங்களைப் பாட வைத்தேன். ஆனால் ஷங்கர் சார், இது நன்றாக இல்லை வடிவேலு பாடியது வேண்டாம். வேறொருவரைப் பாட வையுங்கள் என்று சொல்லிவிட்டார். அதனால் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று சொன்னாராம்.

சும்மா இருந்த என்னைக் கூப்பிட்டு பாட வைத்தது நீங்கள். இப்போது எனக்கு ஒரு தகவல் கூடச் சொல்லாமல் நீங்களாக மாற்றுவீர்களா? என்று கேட்டதில் தொடங்கிய சிக்கல் இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

இவ்விசயத்தில் வடிவேலுவும் சிம்புதேவனும் ஒத்த கருத்தில் இருக்கிறார்கள். ஷங்கரின் பிடிவாதத்தால் மட்டுமே சிக்கல் நீடிக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

சென்னை ஈவிபி ஸ்டூடியோவில் புராணக் கால ஸ்டைலில் ஒரு கோடி ரூபாய்க்கு பிரமாண்டமாக இரண்டு வகை செட்டுகள் போடப்பட்டன. முதலில் வடிவேலு அளவு கொடுத்து அங்கீகரித்த, அரசர் கால உடையை அணிந்துகொண்டு, பாடல் காட்சியைப் படமாக்கத் திட்டமிட்டிருந்தார், இயக்குநர் சிம்புதேவன்.

வடிவேலு செட்டுக்குள் வரும்போது கேமரா சுழன்றது. திடீரென ஷூட்டிங்கை நிறுத்தச் சொன்னவர், `எனக்குக் காஸ்ட்யூம் பிடிக்கவில்லை.இந்தப் பாட்டும் பிடிக்கவில்லை எனக் கூற அதிர்ந்து போனார்கள். ஈவிபி ஸ்டூடியோவை விட்டுக் கிளம்பிய வடிவேலு யாரிடமும், சொல்லாமல் கொள்ளாமல் திடீரென விமானம் ஏறி மதுரைக்குப் பறந்தார். `இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்துக்காக மொத்தமாக 70 நாள்கள் கால்ஷீட் கொடுத்திருந்த வடிவேலு, 10 நாள்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படப்பிடிப்பு ஆரம்பித்து ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது. தொடர்ந்து வடிவேலுவால் பல சிக்கல்கள் ஏற்பட்டதால், ஷங்கர்,வடிவேலு மீது புகார் கொடுத்தார். இறுதியாக ஷங்கர் தரப்பிடமும், வடிவேலுவிடம் சமாதானம் பேசும் வேலையில் தீவிரமாக இறங்கினார், சீமான். வடிவேலு சம்பளப் பணத்தைக் கூடுதலாக கோடிகளில் கேட்க கொந்தளித்துப் போனார், ஷங்கர்.

இனிமேல் `இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் வடிவேலு நடிக்கவே வேண்டாம் என முடிவெடுத்தார். ஷங்கருக்கும் வடிவேலுக்கும் இடையே லைகா நிறுவனம் சமரசம் பேசியது. வடிவேலுவுக்குத் தரவேண்டிய பணத்தை எங்கள் பேனரில் நடிக்கும் படங்களின் வாயிலாக குறைத்துக்கொள்கிறோம் என்று ஷங்கருக்கு வாக்குறுதி கொடுத்தது. இதன்பிறகும், ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்திலிருந்து வடிவேலு நீக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்‌ஷனும் காமெடியும் கலந்த வேறு ஹீரோவிடம் ஷங்கரும் சிம்புதேவனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Entertainment News

Popular Categories