பெண் கொலை வழக்கு: திரைப்பட நட்சத்திரங்கள் 2 பேர் கைது

Published:

ராமாபுரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் அருகே குப்பைத் தொட்டியில் அருகே ஜனவரி 5-இல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சசிரேகா என்ற பெண் சடலம் கிடந்தது. இதுதொடர்பாக போலீஸார், சசிரேகாவுடன் வாழ்ந்த ரமேஷ் , அவருடன் இருந்த லக்குவியா ஆகிய 2 பேரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், ரமேஷுக்கு, கேளரத்தைச் சேர்ந்த லக்குவியா என்ற துணை நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று வீட்டில் வைத்து ரமேஷுக்கும், சசிரேகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் தாக்குதலுக்கு ஆளான சசிரேகா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து, ரமேஷும், லக்குவியாவும் தலையை துண்டித்து கொளப்பாக்கத்தில் உள்ள ஒரு கால்வாயில் வீசியுள்ளனர். பின்னர் சடலத்தை ராமாபுரம் பள்ளியின் அருகே உள்ள குப்பைத் தொட்டி அருகே போட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

Related articles

Recent articles

spot_img