உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக விராட் கோலி நிச்சயம் திகழ்வார் என்று முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். “சூழ்நிலைக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் விராட் கோலியின் திறமை அபாரம். அவரது ஆட்ட அணுகுமுறைகளில் இதனைக் காண முடியும். 3 வடிவங்களிலும் அவர் அற்புதமாக ஆடி வருகிறார். ஒரு முழுநிறைவான கிரிக்கெட் வீரர் என்றால் எந்த ஒரு ஆட்டத்துக்கும் சூழலுக்கும் தன்னை தகவமைத்து கொள்பவர்தான் சிறந்த வீரர் என்றும் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்

