January 19, 2025, 9:07 AM
25.7 C
Chennai

வினாத்தாள் வெளியான விவகாரம்: ஏப்.25ல் மறு தேர்வு!

சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ பொருளாதார பாட மறுதேர்வு ஏப்ரல் 25-ஆம் நடைபெறும் என்றும் 10ஆம் வகுப்பு மறுதேர்வு குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் சிபிஎஸ்இ தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தில்லியில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் செய்தியாளர்களிடம் பேசிய போது வினாத்தாள் வெளியான விவகாரத்தில் ஏப்ரல் 25 ஆம் தேதி 12ம் வகுப்பு பொருளியல் மறுதேர்வு நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.

வினாத்தாள் வெளியானதால் 12ம் வகுப்பு பொருளியலுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்புக்கான கணிதத் தேர்வு தில்லி மற்றும் ஹரியானாவில் மட்டுமே வெளியாகியுள்ளது. தேவைப்பட்டால் தில்லி மற்றும் ஹரியானாவில் மட்டும் மறுதேர்வு நடத்தப்படும். நாடு முழுவதும் தேர்வு நடத்துவதாக இருந்தால், 10ஆம் வகுப்புக்கு ஜூலை மாதத்தில் மறு தேர்வு நடைபெறும்.

வினாத்தாள் வெளியானது குறித்து தற்போது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விசாரணைகளின் அடிப்படையில், 10ஆம் வகுப்பு கணிதத் தேர்வு குறித்து 15 நாட்களில் ஆலோசித்து அறிவிக்கப்படும்” என்று கூறினார் அனில் ஸ்வரூப்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூரில் போர்வை சாற்றும் வைபவம்; பக்தர்கள் பங்கேற்பு!

முன்னதாக, வினாத்தாள் வெளியான விவகாரத்தில்,மறு தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு எதிராக மாணவர்கள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும்,  மறுதேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெறும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததன் எதிரொலியாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் வீட்டைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

மறுதேர்விற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தில்லி ஜந்தர்மந்தரில் நேற்று போராட்டம் நடத்திய சிபிஎஸ்இ மாணவர்கள், இன்று, சிபிஎஸ்இ தலைமை அலுவலகம் முன்னர் போராட்டம் மேற்கொண்டனர். இந்தப் போராட்டம் தீவிரமடைவதன் எதிரொலியாக, டெல்லி குஷாக் சாலையில் உள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகரின் வீட்டைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.