December 5, 2025, 5:51 PM
27.9 C
Chennai

முத்துக்கருப்பன் ராஜினாமாவை வரவேற்ற ஸ்டாலின்! கனிமொழி உள்ளிட்ட 4 பேரும் ராஜினாமா செய்வர் என்கிறார்!

kanimozhi - 2025

சென்னை: மக்களுக்கு குடிநீர் கிடைக்காத போது பதவி எதற்கு..? எனவே நான் ராஜினாமா செய்யப் போகிறேன் என்று அதிமுக.,வின் நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி., முத்துக்கருப்பன் அறிவித்துள்ளார்.

மாநிலங்களவை அவைத் தலைவரிடம் என்னுடைய ராஜினாமா கடிதத்தை 2 நாட்களில் அளிப்பேன் என்று முத்துக்கருப்பன் எம்.பி. தெரிவித்தார். மேலும், மத்திய பாஜக., அரசு மீதான  நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கும், அதிமுக., அவையை முடக்குவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறினார் முத்துக்கருப்பன்.

இந்த விவகாரம் இன்று தமிழக ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. செய்திகளில் முக்கிய இடத்தைப் பிடித்த முத்துக்கருப்பனின் ராஜினாமா முடிவு பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இதனிடையே, அதிமுக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக எம்.பி. முத்துக்கருப்பன் ராஜினாமா செய்வதை நான் வரவேற்கிறேன் என்று கூறிய ஸ்டாலின்,  என்ன அழுத்தம் கொடுத்தாலும் மோடி செவி சாய்க்கமாட்டார் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று கமல் கூறியிருப்பதை வரவேற்பதாகத் தெரிவித்தார். மேலும், என்ன அழுத்தம் கொடுத்தாலும் பிரதமர் மோடி மசியப்போவதில்லை, பிரதமரை சந்திப்பதால் எந்தப் பலனும் இல்லை என்பதாலேயே அவரை கருப்புக்கொடியுடன் சந்திக்க இருப்பதாகத் தெரிவித்தார் ஸ்டாலின்.

மேலும், இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்தால், தி.மு.க. உறுப்பினர்களும் ராஜினாமா செய்யத் தயாராக உள்ளனர் என்று கூறினார் மு.க.ஸ்டாலின்.

இதனிடையே, அதிமுக., எம்பி.,க்கள் ராஜினாமா செய்வது போல், காவிரிப் பிரச்னைக்கு மூல காரணமான திமுக., தனது எம்.பி.க்களை ராஜினாமா செய்யக் கோருமா என்று அரசியல் மட்டத்தில் கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. அவர்கள் செய்தால் நாங்கள் செய்வோம் என்று ஸ்டாலின் கூறுவது வெற்று அரசியல் என்றும், வழக்கம் போல், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக குறைந்த பட்சம் திமுக., தலைவரிடமாவது ராஜினாமா கடிதம் கொடுத்து வழக்கமான அரசியல் நாடகத்தையாவது திமுக., அரங்கேற்றுமா என்றும் சமூக வலைத்தளங்களில் கேலியும் கிண்டலும் தொடரத்தான் செய்கின்றன.

m k stalin dmk - 2025

குறிப்பாக திமுக.,வின் தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி என நால்வரும் ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமா திமுக., என்று கேள்வி எழுப்பப் படுகிறது.

கனிமொழியின் பதவிக்காலம் 2019 ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிகிறது. திருச்சி சிவாவின் பதவிக்காலம் 2020 ஏப்ரல் 1 வரை உள்ளது. மற்ற இருவரின் பதவிக்காலம் 2022 ஜூன் 29 வரை உள்ளது. எனவே இவர்கள் நால்வரையும் காவிரிக்காக ராஜினாமா செய்யச் சொல்லி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து திமுக., தான் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த வேண்டும் எனும் கோரிக்கைகள் இப்போது பலமாக எழத் துவங்கியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories