மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திரத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் சாய்கிருஷ்ணா ஆஜாத் பூஜாலா தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆந்திர துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் வசிக்கும் தனது மாநிலத்தைச் சேர்ந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பிய மனுவில்… ஆந்திர மாநில வனப் பகுதிகளில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக செம்மரக் கடத்தலில் ஈடுபடுகின்றனர். வனப் பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபடுவோரைப் பிடிக்கும் முயற்சியாக மாநில அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழகத்தில் ஆந்திர பேருந்துகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. தடா எல்லையில் ஆந்திர அரசுக்குச் சொந்தமான பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. சென்னையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆந்திரத்தை பூர்விகமாகக் கொண்டு தமிழகத்தில் தொழில்புரிந்து வரும் உரிமையாளர்களுக்குச் சொந்தமான கடைகள், உணவகங்கள், கிளப்புகள், வங்கிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன. மதிமுக பொதுச் செயலர் வைகோ தமது மாநிலத்தில் உள்ள தெலுங்கு மொழி பேசும் ஆந்திர மாநிலத்தவர்களை வெளியேறும்படி மிரட்டல் விடுப்பதாக செய்திகள் வருகின்றன. ஆந்திர மாநிலத்துக்கு எதிராக அவர் மக்களிடையே கிளர்ச்சி ஏற்படும் வகையில் பேசி வருகிறார். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையே அமைதி கெடும் சூழல் உருவாகியுள்ளது. இவை அனைத்தும் ஆந்திர மாநிலத்தவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களாகக் கருதப்படுகின்றன. தமிழகத்தில் வசிக்கும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களையும், அவர்களின் உரிமைகளையும் பாதுகாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைக்கவும், வைகோ மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளப்பட்டுள்ளது.
Hot this week
நிகழ்ச்சிகள்
இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
வணிகம்
போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!
மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.
சற்றுமுன்
சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..
சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...
உலகம்
இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!
இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

Topics
நிகழ்ச்சிகள்
இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
வணிகம்
போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!
மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.
சற்றுமுன்
சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..
சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...
உலகம்
இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!
இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
இந்தியா
பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!
பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கல்வி
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!
இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.
உரத்த சிந்தனை
பிஜேபி., உள்ள வந்துடும்!
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
Entertainment News
Next article


