ஆதி திராவிடரில் 6 பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்ற ஆய்வுகுழு!

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

ஆதிதிராவிடரில் 6 பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்வதற்கு,ஆய்வு செய்வதற்கான குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது.

குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், பள்ளன் ஆகிய 6 பிரிவுகளையும் ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜ்வர்மா தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது.

தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக மீண்டும் ஆய்வுக்குழு அமைத்தது தமிழக அரசு. தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் தொடர்பாக திமுக ஆட்சி காலத்தில் நீதிபதி ஜனார்தனம் கமிட்டி அமைத்து 2011 ஜனவரியில் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.

அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் செயல்படாமல் இருந்த அந்தக் குழு கலைக்கப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை பல்கலைக் கழகப் பேராசிரியர் சுமதி தலைமையில் மானுடவியல் ஆய்வுக் குழுவை முதல்வர் பழனிச்சாமி அமைத்தார், அக்குழு தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், தாசில்தார்களிடம் ஆய்வு செய்து அறிக்கை கேட்கப்பட்டது. அந்த அறிக்கைகளும் முதல்வர் அலுவலகத்திற்கு சென்று சேர்ந்து விட்டது. அந்த அறிக்கைகளின் அடிப்படையில் தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிட வேண்டும். இல்லையென்றால் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று பாஜக, அதிமுகவோடு தோழமையாக இருக்கும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அறிவித்தார்.

பிரதமர் மோடி மதுரை பாஜக தேர்தல் கூட்டத்தில் தமிழக அரசுக்கு இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற பரிந்துரை செய்துள்ளதாக கூறினார்.

திமுக ஆட்சிக்கு வந்து மூன்று மாத காலத்திற்குள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று மு.க.ஸ்டாலின், பரமக்குடியைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரத்திலும் அறிவித்தார்.

இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் மூன்றாவதாக மீண்டும் ஒரு புதிய மூவர் ஆய்வுக் குழுவை அமைத்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories