ஆதி திராவிடரில் 6 பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்ற ஆய்வுகுழு!

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

ஆதிதிராவிடரில் 6 பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்வதற்கு,ஆய்வு செய்வதற்கான குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது.

குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், பள்ளன் ஆகிய 6 பிரிவுகளையும் ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜ்வர்மா தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது.

தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக மீண்டும் ஆய்வுக்குழு அமைத்தது தமிழக அரசு. தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் தொடர்பாக திமுக ஆட்சி காலத்தில் நீதிபதி ஜனார்தனம் கமிட்டி அமைத்து 2011 ஜனவரியில் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.

அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் செயல்படாமல் இருந்த அந்தக் குழு கலைக்கப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை பல்கலைக் கழகப் பேராசிரியர் சுமதி தலைமையில் மானுடவியல் ஆய்வுக் குழுவை முதல்வர் பழனிச்சாமி அமைத்தார், அக்குழு தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், தாசில்தார்களிடம் ஆய்வு செய்து அறிக்கை கேட்கப்பட்டது. அந்த அறிக்கைகளும் முதல்வர் அலுவலகத்திற்கு சென்று சேர்ந்து விட்டது. அந்த அறிக்கைகளின் அடிப்படையில் தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிட வேண்டும். இல்லையென்றால் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று பாஜக, அதிமுகவோடு தோழமையாக இருக்கும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அறிவித்தார்.

பிரதமர் மோடி மதுரை பாஜக தேர்தல் கூட்டத்தில் தமிழக அரசுக்கு இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற பரிந்துரை செய்துள்ளதாக கூறினார்.

திமுக ஆட்சிக்கு வந்து மூன்று மாத காலத்திற்குள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று மு.க.ஸ்டாலின், பரமக்குடியைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரத்திலும் அறிவித்தார்.

இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் மூன்றாவதாக மீண்டும் ஒரு புதிய மூவர் ஆய்வுக் குழுவை அமைத்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories