வீட்டுக்கே சென்று சோதனை செய்ய யாரையும் அனுப்பவில்லை: பேஸ்புக் மறுப்பு!

03 July11 Facebook - 2026

சோதனை செய்ய வீட்டிற்கே ஆட்களை அனுப்பினோமா? இல்லை என்று பேஸ்புக் மறுப்பு தெரிவித்துள்ளது.

பதிவிடும் நபரின் வீட்டுக்கே சென்று சோதனை செய்யும் எந்த நடவடிக்கையிலும் பேஸ்புக் ஈடுபடவில்லை என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அரசியல் பதிவிட்டதாகவும், அந்த நபரின் வீட்டுக்கே சென்ற பேஸ்புக் அதிகாரிகள் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தியுயதாகவும் IANS செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் பதிவிட்ட அந்த நபர், ”பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு போலீசார் வீட்டுக்கு வருவதை போல என் வீட்டுக்கு பேஸ்புக் அதிகாரிகள் வந்தார்கள். என்னுடைய ஆதார் அட்டையை சோதனை செய்தார்கள். இது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.

சமூக வலைத்தளத்தில் பயனாளர்களின் சுதந்திரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது” என்று தெரிவித்திருந்தார் என்றும் IANS செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

இந்த விவகாரம் சமூக வலைத் தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று பலரும் கருத்து பதிவிட்டனர்.

இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டை பேஸ்புக் நிர்வாகம் மறுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள பேஸ்புக் செய்தி தொடர்பாளர், ” பேஸ்புக்கில் பதிவிடும் நபரின் வீட்டுக்கே சென்று சோதனை செய்யும் எந்த நடவடிக்கையிலும் பேஸ்புக் ஈடுபடவில்லை. இந்தியாவை பொறுத்தவரை அரசியல் தொடர்பான விளம்பரங்கள் பெறுவதிலும், அதை கண்காணிக்கும் நிலையிலும் மட்டுமே பேஸ்புக் ஈடுபட்டு வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

அப்படி எனில் பேஸ்புக் பெயரைப் பயன்படுத்தி எவரும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது மட்டும் தெரிய வருகிறது ஒருவரின் ஆதார் எண்ணை அறிந்து கொண்டு அவரின் மற்ற நடவடிக்கைகளை கேட்டுப் பெறுவதற்காக கூட இது இதுபோன்று யாரேனும் சமூக விரோதிகள் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories