வீட்டுக்கே சென்று சோதனை செய்ய யாரையும் அனுப்பவில்லை: பேஸ்புக் மறுப்பு!

03 July11 Facebook - 2026

சோதனை செய்ய வீட்டிற்கே ஆட்களை அனுப்பினோமா? இல்லை என்று பேஸ்புக் மறுப்பு தெரிவித்துள்ளது.

பதிவிடும் நபரின் வீட்டுக்கே சென்று சோதனை செய்யும் எந்த நடவடிக்கையிலும் பேஸ்புக் ஈடுபடவில்லை என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அரசியல் பதிவிட்டதாகவும், அந்த நபரின் வீட்டுக்கே சென்ற பேஸ்புக் அதிகாரிகள் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தியுயதாகவும் IANS செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் பதிவிட்ட அந்த நபர், ”பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு போலீசார் வீட்டுக்கு வருவதை போல என் வீட்டுக்கு பேஸ்புக் அதிகாரிகள் வந்தார்கள். என்னுடைய ஆதார் அட்டையை சோதனை செய்தார்கள். இது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.

சமூக வலைத்தளத்தில் பயனாளர்களின் சுதந்திரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது” என்று தெரிவித்திருந்தார் என்றும் IANS செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

இந்த விவகாரம் சமூக வலைத் தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று பலரும் கருத்து பதிவிட்டனர்.

இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டை பேஸ்புக் நிர்வாகம் மறுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள பேஸ்புக் செய்தி தொடர்பாளர், ” பேஸ்புக்கில் பதிவிடும் நபரின் வீட்டுக்கே சென்று சோதனை செய்யும் எந்த நடவடிக்கையிலும் பேஸ்புக் ஈடுபடவில்லை. இந்தியாவை பொறுத்தவரை அரசியல் தொடர்பான விளம்பரங்கள் பெறுவதிலும், அதை கண்காணிக்கும் நிலையிலும் மட்டுமே பேஸ்புக் ஈடுபட்டு வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

அப்படி எனில் பேஸ்புக் பெயரைப் பயன்படுத்தி எவரும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது மட்டும் தெரிய வருகிறது ஒருவரின் ஆதார் எண்ணை அறிந்து கொண்டு அவரின் மற்ற நடவடிக்கைகளை கேட்டுப் பெறுவதற்காக கூட இது இதுபோன்று யாரேனும் சமூக விரோதிகள் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories