வீட்டுக்கே சென்று சோதனை செய்ய யாரையும் அனுப்பவில்லை: பேஸ்புக் மறுப்பு!

03 July11 Facebook - 2026

சோதனை செய்ய வீட்டிற்கே ஆட்களை அனுப்பினோமா? இல்லை என்று பேஸ்புக் மறுப்பு தெரிவித்துள்ளது.

பதிவிடும் நபரின் வீட்டுக்கே சென்று சோதனை செய்யும் எந்த நடவடிக்கையிலும் பேஸ்புக் ஈடுபடவில்லை என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அரசியல் பதிவிட்டதாகவும், அந்த நபரின் வீட்டுக்கே சென்ற பேஸ்புக் அதிகாரிகள் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தியுயதாகவும் IANS செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் பதிவிட்ட அந்த நபர், ”பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு போலீசார் வீட்டுக்கு வருவதை போல என் வீட்டுக்கு பேஸ்புக் அதிகாரிகள் வந்தார்கள். என்னுடைய ஆதார் அட்டையை சோதனை செய்தார்கள். இது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.

சமூக வலைத்தளத்தில் பயனாளர்களின் சுதந்திரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது” என்று தெரிவித்திருந்தார் என்றும் IANS செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

இந்த விவகாரம் சமூக வலைத் தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று பலரும் கருத்து பதிவிட்டனர்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டை பேஸ்புக் நிர்வாகம் மறுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள பேஸ்புக் செய்தி தொடர்பாளர், ” பேஸ்புக்கில் பதிவிடும் நபரின் வீட்டுக்கே சென்று சோதனை செய்யும் எந்த நடவடிக்கையிலும் பேஸ்புக் ஈடுபடவில்லை. இந்தியாவை பொறுத்தவரை அரசியல் தொடர்பான விளம்பரங்கள் பெறுவதிலும், அதை கண்காணிக்கும் நிலையிலும் மட்டுமே பேஸ்புக் ஈடுபட்டு வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

அப்படி எனில் பேஸ்புக் பெயரைப் பயன்படுத்தி எவரும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது மட்டும் தெரிய வருகிறது ஒருவரின் ஆதார் எண்ணை அறிந்து கொண்டு அவரின் மற்ற நடவடிக்கைகளை கேட்டுப் பெறுவதற்காக கூட இது இதுபோன்று யாரேனும் சமூக விரோதிகள் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories